*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மை காண்கிற தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
எத்தனை பெரிய கூட்டத்திலும் தன்னுடைய பிள்ளை மீது எப்போதும் கண் வைத்து கவனமாய் பார்த்துக்கொண்டே இருப்பாள் அதன் தாய்.
எத்தனை குழந்தைகள் சேர்ந்து கத்தினாலும், தன் பிள்ளையின் சத்தம் மாத்திரம் தனியே அவளுக்கு கேட்கும்.
அது போல, அதைக்காட்டிலும் மேலாக,
நம் பரம பிதா நம்மை எப்போதும் கண்காணிக்கிறவர்.
நம் போக்கு வரவை பாதுகாக்கிறவர்.
தேவைகளை ஏற்ற வேளையில் கொடுப்பவர்.
முக்கியமாக நாம் கூப்பிடும்போது செவிசாயப்பவர். சங். 27:10
எந்த சூழ்நிலையிலும் துவண்டு போகாமல், உற்சாகமாய் இருப்போம். மற்றவர் நமக்கு தீங்கை ஏற்படுத்தினாலும், அதையே நமக்கு ஏற்ற நன்மையாக மாற்றக்கூடிய நம் ஜீவனுள்ள சர்வ வல்லமையுள்ள பிதா ஒருவரே.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; 1பேது. 3:12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக