திங்கள், 22 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 22 Feb 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

நம்மை பரிசுத்தபடுத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தான் சுத்தமுள்ளவன் என்றும்,

சகலத்தையும் பிரமாணத்தின்படியே செய்கிறவன் என்றும் சொல்லிக்கொண்டு இருந்ததாலே,

இரட்சகராகிய *இயேசு கிறிஸ்துவே அருகாமையில் இருந்தும்கூட* சுய தவறுகளை உணராதபடிக்கு *பரிசேயராகவே பலர் காலம் கடத்திவிட்டனர்*.

 

அப்படிப்பட்ட சூழ்நிலை தற்போதும் தொடர்கிறது:

 

- வாசிக்கும் வேத வசனத்திற்கு *சொந்த* புரிதலும்,

 

- தன் இஷ்டதிற்கு வளைத்து, வயதானவரோ அல்லது தனக்கு விருப்பமுள்ளவர் எதைச் சொன்னாலும் அது தான் சரியான விளக்கம் என்றும்,

 

- வேதத்தில் தெளிவாக இருந்தாலும், நம் கொள்கையை விட்டு விடகூடாதென்றும்,

 

- முடிவுற்றிருந்தால் என்ன, இன்றும் பின்பற்றுவதில் தவறில்லை என்றும்,

 

சுய கற்பனைகளினால் வேதத்தின் நிதர்சன உண்மையை மறுத்துவிட இடமளிக்ககூடாது.

 

ஒவ்வொரு நாளும் வேதத்துடன் ஒப்பிட்டு நிதானிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

 

அனுதின வேத வாசிப்பை கடமைக்கென்று படிக்காமல், *ஒப்பிட்டு பார்க்க* படிப்போம்.

 

அப்போது, தினம் தினம் தெளிவு வரும்.  நீதி. 20:9, கலா. 4:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :

https://wp.me/pbU5iQ-1dK
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக