திங்கள், 25 ஜனவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 25 Jan 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

தேவ கிருபை நம்மை ஆள்வதாக.

இது சரியில்லை, அது சரியில்லை என்று,
சதா கஷ்டங்களையும், சுயகற்பனைகளையும் பிணைத்து வைத்தால்,
மிஞ்சுவது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் தான்.

புலம்பலுக்காக புஸ்தகத்தையே எழுதிய எரேமியா தீர்க்கன் கூட, *புதிய* காலையில் *புதிய* கிருபை என்று நினைவு கூறுகிறார். புலம்பல் 3:23

நாம் செய்த கொடுமையான தவறுகளை கூட தேவன் மன்னித்து, மறந்து,
புதிய கிருபையை கொடுக்கும் போது,
நாமோ போட்டி, பொறாமைகள், வீண் கற்பனைகளை வளர்த்து ஒருவருக்கொருவர் விரோத்திக்கிறோம் !!

நமக்கு முன்பாக தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துவிடாதபடி தந்திரக்காரனான பிசாசு இருதயத்தின் எண்ணங்களை பிணைத்து விடுகிறான்.

தேவனிடத்தில் முழுவதுமாய் தாழ்த்தி ஒப்புகொடுத்தல் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் வருவிக்கும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/  

-*--*--*--*--*--*--*--*--

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக