*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
வாக்குததங்களின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
இஸ்ரவேலின் விடுதலையைக் குறித்து எரேமியாவிற்கு தீர்க்கதரிசனமாக உரைக்கபட்டிருந்தது.
அது நிறைவேற வேண்டிய துல்லியமான காலத்தையும் கணித்து பார்த்து *புரிந்து கொண்டார்* தானியேல். தானியேல் 9:2
ஆயினும், வேதவாக்கின்படி எப்படியும் விடுதலை கிடைத்து விடும் என்று சும்மாயிருந்து விடாமல், அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும்படி தானியேல், உபவாசித்து, *தன்னை தாழ்த்தி, பாவ மன்னிப்புக்காக* மன்றாடினார். தானியேல் 9:3-19
தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறினது.
அவர் இப்படி ஜெபம் செய்துக்கொண்டிருக்கும்போதே அதற்கேற்ற பதில் வந்தது என்று பார்க்கிறோம்... தானியேல் 9:20-23
கிறிஸ்தவர்களாகிய நாம், ஆண்டவரும், இரட்சகரும் நம்முடைய தலையாகவும் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேற அவர் கட்டளைக்கு *கீழ்படிந்து* நம்மை தாழ்த்தி அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
நிச்சயமாய் நம்மை உயர்த்துவார், மீட்பார், இரட்சிப்பார், பெலபடுத்துவார், சுகமளிப்பார்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக