திங்கள், 14 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 14 Dec 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தன் *முழு சரீரத்தையும்* அடிக்க கொடுத்து,
முற்றும் முடிய *எல்லா ரத்தமும் சிந்தி*,
கல் அறையில் அடக்கப்பட்டு,
மூன்றாம் நாள் உயிர்தெழுந்து,
தேவன் தனக்கு ஒப்புக்கொடுத்த பொறுப்பை,
நம் எல்லாருக்காகவும் கிறிஸ்து இயேசு,
பாவ நிவாரணத்தை சிலுவையின் மூலம் ஏற்படுத்தினார்.  எபி. 9:14

உங்கள் உடம்பை கீரிகொள்ளவோ,
ஈட்டியால் வாயை கிழித்துகொள்ளவோ,
முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு தேர் இழுக்கவோ,
செருப்பு இல்லாமல் பல ஊர்களுக்கு பாதயாத்திரை போகவோ சொல்லாமல்;

யாரெல்லாம் இயேசுவின் வாரத்தையைக் கேட்டு,
இருதயத்தில் முழுமையாய் விசுவாசித்து (நம்பி),
அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து,
மனந்திரும்பி, ஞானஸ்நானம் எடுக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை *முழுவதும் மன்னிக்கிறேன்* என்றும்,
அவர்கள் தன்னுடைய பிள்ளையாக மாறுகிறார்கள் என்றும் பிதாவாகிய தேவன் வாக்கு கொடுத்தார்.  அப் 2:37-38, யோவான் 1:12, மாற்கு 16:16

விசுவாசிப்பதற்கும், மனந்திரும்புவதற்கும், வாயினால் அறிக்கை செய்வதற்கும், ஞானஸ்நானம் எடுப்பதற்கும், இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுவதற்கும், யாருக்கும் எவருக்கும் காணிக்கையோ, தண்டமோ, சந்தாவோ, எந்த விலையும் கொடுக்கவேண்டியதில்லை. அனைத்துமே இலவசம் தான் !! வெளி. 21:6, 22:17

இயேசு தன்னை *முழுவதுமாய்* ஒப்புக்கொடுத்தும்,
தலையை மாத்திரம் *ஓரமாக கழுவிக்கொள்வதோ*,
சபை கட்டிடத்தினுள் வைத்திருக்கும் *பானைக்குள் தலையை மாத்திரம் முக்கி  எடுத்துக்கொள்வதோ*,
பன்னீர் தெளிப்பது போல *தெளித்து விடுவதோ*
கிறிஸ்துவின் மரணத்தில் பங்கெடுப்பதில்லை. அவ்வாறு மரணத்தில் (ஓழுங்கான/முழுமையான/முறையான ஞானஸ்நானம்) முறையாக பங்கெடுக்காவிடில், உயிர்தெழுதலிலும் பங்கு இல்லை என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது. ரோ.6:4-5

வைராக்கியமாய் வாழ்வது அவசியம் என்று நினைத்து முறையான ஞானஸ்நானம் எடுக்காமல், வாழ்க்கையையே தொலைத்துவிடவேண்டாம்.

ஞானஸ்நானம் என்பது அநேகருக்கு *கேலி கூத்தாய் போய்விட்டது*.
Baptizo என்கிற மூல கிரேக்க வார்த்தைக்கு “முழுகுதல்” என்று அர்த்தம்.

*வேதத்திற்கு மாத்திரம் செவி சாய்ப்போம்*. ரோம 6:4, அப் 8:38, தீத்து 3:5, எபே 5:26.

வேதத்தின்படி இன்னும் எடுக்காவிட்டால் உடனே செயல்படுத்தவும்.... கால தாமதம் வேண்டாம். !!

கவனம் -> இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் என்பது வேதத்தில் சொல்லப்படாத முறை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக