வெள்ளி, 25 டிசம்பர், 2020

#1054 - மனந்திரும்பிய பின்பும், நினிவே பட்டணத்தை தேவன் ஏன் அழித்தார்? நாகூம் புத்தகத்தில் சொல்லப்படும் நினிவே பட்டணமும் யோனா புத்தகத்தில் சொல்லப்படும் நினிவே பட்டணமும் ஒன்றா?

#1054- *மனந்திரும்பிய பின்பும், நினிவே பட்டணத்தை தேவன் ஏன் அழித்தார்?* நாகூம் புத்தகத்தில் சொல்லப்படும் நினிவே பட்டணமும் யோனா புத்தகத்தில் சொல்லப்படும் நினிவே பட்டணமும் ஒன்றா?

*பதில்* : இரண்டு புத்தகத்திலும் சொல்லப்படும் பட்டணமும் ஒன்று தான்.

நாகூம் புத்தகத்தில் சொல்லப்பட்ட நினிவேயைக் குறித்த அழிவு, யோனா தீர்க்கதரிசியின் எச்சரிக்கையை தொடர்ந்து மனந்திரும்பிய ஜனங்களின் சம்பவத்திலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தவை.

நாகூம் தீர்க்கதரிசனப் புத்தகத்தைக் குறித்ததான முன்னோட்டத்தை கீழே காண்க:

ஆசிரியர்: நாகூம்
எழுதப்பட்ட காலக்கட்டம் சுமார் 663 முதல் 612 கி.மு.

நாகூமின் தீர்க்கதரிசனம், அசீரியாவின் வீழ்ச்சியுடனும் அதன் தலைநகரான நினிவேயுடனும் தொடர்புடையது.

நினிவே நகரில் யோனா பிரசங்கித்ததன் விளைவாக, மக்கள் மனந்திரும்பினதை முன்னிட்டு தேவன் அப்போது அந்நகரைக் காப்பாற்றினார்.

யோனாவின் பிரசங்கத்திற்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, அசீரியாவும் நினிவே நகரமும் வீழ்ந்தன.

நினிவே, பூமியின் வலிமையான நகரமாக இருந்தது.

அதன் பட்டணத்து சுவர்கள் 100 அடி உயரமும், 3 குதிரை இரதங்கள் அருகருகே பயணிக்கும் அளவில் அகலம் கொண்டதாக இருந்தன.

சுவர்கள் 150 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட அகழியால் சூழப்பட்டன.

நினிவே 20 ஆண்டுகால முற்றுகையைத் தாங்கும் அளவு செழிப்பானதாக இருந்தது என்று நம்பப்பட்டது.

நினிவே “நிரம்பி வழியும் வெள்ளத்துடன்” முடிவடையும் (1:8) என்ற தீர்க்கதரிசனம் டைக்ரிஸ் நதியின் கரைகள் நிரம்பி, நினிவேயின் சுவரின் ஒரு பகுதியை அழித்தபோது அது நிகழ்ந்தது.

வெள்ள சேதத்தின் விளைவாக, 62 கி.மு.வில் சுவரில் ஏற்பட்ட இடைவெளி வழியாக பாபிலோனியர்கள் படையெடுத்து, நகரத்தை சூறையாடி, தீ வைத்தனர். நினிவே "மறக்கப்பட்டது". செப். 2:3, நாகூம் 3:13

அதன் அழிவுக்குப் பிறகு (612 கி.மு) அழிந்து 2, 254 ஆண்டுகளுக்குப் பிறகு, 1842 கி.பி வரை கண்டுபிடிக்கப்படாததால் நகரம் உண்மையிலேயே மறைக்கப்பட்டது.

612 கி.மு.வில் நினிவே அழிக்கப்பட்ட பிறகு, அது ஒருபோதும் மீண்டும் கட்டப்படவில்லை. நாகூம் 3:18, செப். 2:13-15

இந்த புத்தகத்தின் முதல் வசனம் "நினிவேயின் பாரம்" (1:1) என்று செய்தி நமக்குத் தெரிவிக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை புத்தகத்தின் முக்கிய உந்துதல் நினிவேயின் வீழ்ச்சி, இது "இரத்தப்பழிகளின் நகரம்" (3:1) என்று விவரிக்கப்படுகிறது. அதன் அழிவு வந்ததும், “நினிவே வீணாகிவிட்டது” (3: 7) என்று மக்கள் கூச்சலிடுவார்கள்.

நாகூம் தீர்க்கதரிசனம் கூறியபோது, மத்திய கிழக்கில் அசீரியப் பேரரசு ஆதிக்கம் செலுத்தியது. அசீரியா இஸ்ரவேலின் வடக்கு இராஜ்யத்தை கி.மு. 722/721 -களில் மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் யூதாவைத் தாக்கியது. தேவனுடைய மக்கள் அசீரியாவை ஒரு இரக்கமற்ற எதிரி என்று எண்ணினார்கள்.

டைக்ரிஸ் ஆற்றில் அமைந்துள்ள நினிவே, அசீரியப் பேரரசின் தலைநகராக இருந்தது. தேவனுடைய மற்றொரு தீர்க்கதரிசி யோனா பிரசங்கிக்க அங்கு சென்றபோது நினிவேயில் வசிப்பவர்கள் மனந்திரும்பினர் (யோனா 3: 1-10; மத்தேயு 12:41).

நாகூம் எழுதுவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது நடந்தது. நினிவேயின் எதிர்காலத்தைப் பற்றி பேச தேவ ஆவி நாகூமை வழிநடத்திய காலத்தில், நகரத்தில் பாவம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

எகிப்திய நகரமான நோ-அமோனின் கடந்த கால கவிழ்ப்பை நாகூம் குறிப்பிடுகிறார். அது 663 கி.மு.வில் நடைபெற்றது. (நாகூம் 3:8).

ஆகவே, அந்த நிகழ்வுக்குப் பிறகு இந்த புத்தகம் எழுதப்பட்டது என்று அறியமுடியும்.

நினிவே அழிக்கப்பட்டது 612 கி.முவில். ஆகவே, 663-612 கி.மு வின் காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும்.

நினிவேக்கு வரவிருக்கும் அழிவைப்பற்றி நாகூம் மட்டுமல்ல, ஏசாயா மற்றும் (ஏசாயா 10: 24-27), செப்பனியா மூலமாகவும் தேவன் முன்னறிவித்தார். (செப்பனியா 2: 13-15).

கவனிக்க வேண்டிய நிகழ்வுகள் :
இரத்தப்பழிக்கான நகரம் (3:1)

“இதோ, நான் உங்களுக்கு விரோதமாக இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (3: 5).

நினிவேயின் துன்மார்க்கம் தொடர்ச்சியாக இருந்தது (3:19).

அது கர்த்தருக்கு எதிராக சதி செய்தது (1: 9).

உருவ வழிபாட்டில் தழைத்தோங்கியது. (1:14).

பொய்களும் கொள்ளைகளும் நிறைந்தது (3: 1).

விபச்சாரம் மற்றும் சூனியம் போன்ற சகல பாவக்காரியங்களிலும் செழித்திருந்தது (3: 4).

இத்தனை எச்சரிப்புகளும் இன்று நம் நாட்டில் காணமுடிகிறதே !!
இந்த கேள்விக்காய் நன்றி சகோதரரே.

விபச்சாரம், வேசித்தனம், விக்கிரகாராதனை, கற்பனையான பண்டிகைகள், ஆராதனையில் குத்தாட்டம், கும்மாளம், இசைக்கருவிகளுடன் சேர்ந்து போடும் நடனமும் ஆட்டமும், தேவனுக்கு முன்பாக துளிபயமும் இல்லாமல் குதிப்பதும், அலருவதும், கூச்சலிடுவதும் இப்படி சகல அசுத்தங்களினாலும் நிறைந்திருக்கிற இக்கால நினிவே என்று கிறிஸ்தவ போர்வையில் மதமாகியிருக்கும் கூட்டத்தினரை சுட்டிக்காட்டுவதில் நான் எந்த தயக்கமும் கொள்வதில்லை.

மனந்திரும்ப இன்னும் காலம் உள்ளது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக