*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சமாதானமாய் வழிநடத்தும் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சுகமாய் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் எகிப்திலிருந்து வெளியே வந்த ஜனம், இல்லாததை நினைத்து “இந்த வனாந்திரத்தில் சாகவா எங்களைக் கூட்டி வந்தீர்” என்று அவர்கள் புலம்பின பிரகாரமே அவர்கள் தங்கள் வாயின் வார்த்தையை அந்த வனாந்திரத்திலேயே கண்டார்கள் !! புலம்பாத 2 பேர், தங்கள் எல்லையை அடைந்தார்கள்.
முறுமுறுக்கும் போது தேவன் வன்மையாக *நம் மீது கோபப்படுகிறார்*. எண் 11:1
ஜுரம் உள்ளவர்கள் -> அரிபிளவினால் (கேன்சர்/அரிபிளவினால்) போராடுபவர்களை கவனிக்க வேண்டும்.
தம்பதியர் -> விதவைகள் வேதனையைப் பார்க்க வேண்டும்.
பெற்றோர் -> பிள்ளைக்காக ஏங்கும் தம்பதியினரை பார்க்க வேண்டும்.
பணிபுரிவோர் -> வேலை தேடுபவர்களை கவனிக்க வேண்டும்.
ஏழைகள் -> கடன் பாரத்தோடும், வியாதியோடும், தூக்கமின்றியும் அங்கலாய்ப்பில் புலம்பும் பணக்காரைப் பார்க்க வேண்டும்.
யார் யாருக்கு, தேவன் எதை கொடுத்து இருக்கிறாரோ, அதில் சந்தோஷப்பட்டு அவருக்கு நன்றி சொல்லி வாழ கற்றுக்கொள்வோம்.
கணவனும், மனைவியும், பிள்ளையும், தொழிலாளியும், முதலாளியும், ஊழியனும், பெற்றோரும் - நாம் சுவாசத்தோடு இருப்பதே பெரிய பாக்கியம் என்பதை மறவாதிருங்கள்.
நஷ்டமோ, கஷ்டமோ, வேதனையோ, துன்பமோ, பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ, எதுவாயினும் – ஆண்டவர் கொடுத்தது *நன்மையாக தான்* இருக்கும் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லுவோம் – அதன் பலனைக் காண்போம்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக