வெள்ளி, 23 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 23 Oct 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

பொறுமையின் சிகரமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

அவசர உலகம்..

வேலையே இல்லையென்றாலும் 7 நாளைக்குள் வரவேண்டிய பாஸ்போர்ட்டை தட்கள் முறையில் 3 நாளைக்குள் பெற்றுவிடவேண்டும் என்ற துடிப்பு..

வங்கிக்கு போனால் பின்னதாக நிற்க பொறுமையில்லாமல் ஏற்கனவே வரிசையில் நிற்பவர்களை ஏமாற்றி தன் காரியம் நிறைவேற சகல யுக்திகளையும் கையாண்டு கவுன்டருக்கு செல்வது…

மற்றவர்களது ஆவணங்களை விட, அரசாங்க அலுவலகத்தில் நம் ஆவணம் உடனடியாக சரிப்பார்க்கப்பட வேண்டும்..

கூட கொஞ்சம் பணம் கொடுத்தாவது நம்முடைய காரியம் மாத்திரம் முதலில் கவனிக்க படவேண்டும் …

இந்த ஒழுங்கீனம் கிறிஸ்தவனுக்கு எப்படி வருகிறது?
கிறிஸ்தவனுக்கு ஒழுக்கமும் பொறுமையும் அவசியமாயிற்றே !!

1-வசனத்தை தன்னில் காத்து பலன் கொடுக்க – பொறுமை அவசியம் (லூக்கா 8:15)

2-பொறுமையினால் ஆத்துமாவை காத்துக்கொள்கிறோம். லூக்கா 21:19

3- பலன் கிடைக்காமல் போனாலும் நீடிய பொறுமையோடு நன்மை செய்கிறவன் மகிமையும், கணமும், நித்திய ஜீவனும் பெற்றுக்கொள்கிறான் – ரோமர் 2:7

4- அன்பு செய்கிறவர்களுக்கு வரும் முதல் குணம், ”பொறுமை” – 1 கொரிந்தியர் 13:4

இன்னும் சொல்லிகொண்டே போகலாம்...

அவசரம் வேண்டாம்.. கர்த்தருடைய நேரத்திற்கு நாம் காத்து இருப்போம்.

அவரே அதை வாய்க்க செய்வார்.

கிறிஸ்துவை கண்டு அடையவே நம் துரிதத்தைக் காண்பிப்போம். (யோவான் 20:4)

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக