செவ்வாய், 22 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 22 Sep 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee

கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவன் தாமே நம்மை ஆதரிப்பாராக.

கனத்தையும் மகிமையையும் புகழ்ச்சியையும் நாம் தேவனுக்கே செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

கிறிஸ்துவை சாராமல்,
சரீர பெலமோ, கல்வி அறிவோ, அநுபவ அறிவோ, சுய புத்தியோ, உலக அங்கீகாரமோ, நிறுவனத்தால் கிடைக்கப்பெற்ற பரித்தர் பட்டமோ, சுய ஒழுக்கமோ, எதுவும் நம்மை பரலோகத்திற்கு கொண்டு போவதில்லை. தீத்து 3:5, யோபு 15:14, ஏசா 57:12, ரோ 9:16, ரோ 4:5, 2 தீமோ 1:9

நம்முடைய சுவாசமும், ஜீவனும் நம்முடையது அல்ல. அப் 17:25

அதை பிடித்து வைப்பதும் திரும்ப அழைப்பதும் தேவன் கையில் உள்ளது. யோபு 12:10, யோபு 31:14

ஜீவனோடு இருக்கும் காலத்தில், தேவ பயத்தோடு சத்தியத்திற்கு உட்பட்டு கீழ்படிந்து வாழ்வதே கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதம். மீகா 6:8, 1பேது 3:8-9

நீதிமானின் வாழ்வும் மரணமும் தேவனுக்கு பிரியமானது. சங் 116:15

இரட்சிக்கப்பட்டவர்கள் சந்தோஷத்தோடு அதை சுதந்தரித்துக் கொள்கிறார்கள். (1பேது1:19-24)

தேசத்தின் ஷேமத்தை தேவனுக்கென்று ஆதாயப்படுத்தி, சந்தோஷமாய் சமாதானமாய் வாழ்ந்து நன்மையின் கனியை சுதந்தரித்து வாழ கர்த்தரையே பற்றிக்கொண்டிருப்போம்.

தேவன் சகலத்தையும் வாய்க்கச் செய்வாராக. ஏசா 45:19, புலம் 3:40-41, யாக் 4:9-10

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக