வியாழன், 17 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 17 Sep 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

பரலோகத்தில் வாசமாயிருக்கும் நம் பரம பிதா நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

 

தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக என்றார் ஞானி. பிர 5:2

 

தொண்டையை பிளிறிக்கொண்டு சப்தத்தை உயர்த்தினாலும் 4 வீடுகள் கடந்து உங்கள் சப்தம் கேட்க வாய்ப்பில்லை.

 

ஒரு வேளை, தெரு முனை வரைக்கும் கேட்க வேண்டும் என்றால் அதிகபட்சமாக விசில் அடிக்கலாம் !

 

அருகாமையில் நிற்கும் ஒருவரிடம் சத்தமாக பேசினாலே, “ஏங் கத்துற” – எனக்கு காது நன்றாக கேட்கும், மெதுவா பேசு என்று சொல்வர்!

 

மனதில் நினைத்துக்கொண்டே ஜெபிக்கும் ஜெபத்தையும் கேட்கக்கூடியவர் நம் இதயத்தில் வசிக்கும் ஆவியானவர். யாக் 4:5, எபே 3:17, 1கொரி 3:16, ரோ 8:9

 

அவசியத்திற்கேற்ப ஒலி அளவை ஒலி பெருக்கி பார்த்துக் கொள்ளும். அந்த வேலையை நாமே பார்க்க அவசியமில்லை !!

 

சத்தத்தை எவ்வளவு உயர்த்தினாலும் வானத்திற்கு எட்டாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிர 5:2-3

 

உங்களுடன் இருப்பவர்களும் உங்கள் ஜெபத்தை ஆமேன் என்று சொல்லி அமோதிப்பதற்கான அளவில் குரல் அளவு இருக்கட்டும்.

 

சாந்தமும் அமைதலுள்ள ஜெபமே போதுமானது. 1சாமு 1:13,  ஆதி 24:42-42, நெகே 2:4

 

*Eddy Joel Silsbee*,

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

+968 93215440 / joelsilsbee@gmail.com

 

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக