திங்கள், 6 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 06 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுள்ள வல்லவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இரத்தம் போல சிவப்பாக இருக்கிறது என்று சொல்லப்படும் அதிபயங்கர அனைத்துப் பாவங்களையும் நம்முடைய தேவன் மன்னிக்கிறார், மறக்கிறார், வெகு தூரம் தூக்கியும் போட்டு விடுகிறாராம். (ஏசா 1:18, சங் 103:12)

பாவத்தில், சிறிய பாவம், பெரிய பாவம் என்று இல்லை. ஒரு கொலைக்கும், பல கொலைகளுக்கும் ஒரு முறை தான் தூக்கில் தொங்க விடமுடியும்.

தேவநீதியை மீறுவது பாவம். எந்த விதமான பாவம் நம் வாழ்கையில் இருந்தாலும், நம்முடைய பாவத்தை மன்னிப்பதற்கு அதிகாரம் படைத்தவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.

தன்னுடைய சொந்த இரத்தத்தை முழுவதுமாய் சிந்தி நம் பாவத்துக்காக பிதாவாகிய தேவனிடம் அந்த விலையை செலுத்தினவர் அவர் ஒருவரே. அவரை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது நாம் செய்த அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகிறது. (மாற்கு 16:16, அப் 22:16)

ஞானஸ்நானத்தின் அவசியத்தையும் எந்த பாவமும் அறியாத குழந்தையை மூழ்கடிக்க பெற்றோர் முற்படாதீர்கள் !! அது வேதத்தில் சொல்லப்படாத சம்பிரதாய சடங்கு.... இந்த கணக்கை உங்கள் சொந்த ஞானஸ்நானத்தில் சேர்க்க வேண்டிவரும் !!

தேவ வார்த்தைக்கு மாத்திரம் கீழ்படிவோம். தேவன் நம்மை தன்னுடைய ஆசீர்வாதத்தில் நிறைப்பார்.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக