சனி, 4 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 04 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சுமார் 20 வருடம் முன்பு நடந்த ஒரு சம்பவம்.
இந்தியாவின் தென்பகுதியில் ஒரு கூட்டத்தினர் என்னை செய்தி கொடுக்க அழைத்திருந்தனர். கூட்டம் முடிந்த பின் ஊழியக்காரரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த வேளையில் ஒருவர் அந்த ஊழியரிடம் வந்து அனைவரும் வந்தாயிற்று நீங்கள் வந்து ஜெபம் செய்தால் கல்லறைக்கு போகலாம் என்றார். ஆசாரியர்கள் யாரும் பிரேதம் அருகில் போகக்கூடாதென்று வேதம் சொல்லியிருப்பதால் அங்கு வருவதில்லை என்று மறுத்து அனுப்பி விட்டார்.

எனக்கு சங்கடமாகிவிட்டது. அந்த ஊழியருக்கு வேதாகமத்தின் படி விளக்கம் அளித்துவிட்டு, உடனடியாக புறப்பட்டுவிட்டேன்.

எங்கே இவர்கள் இதை படித்தார்கள்?
நசரேய விரதம் உள்ளவர்கள் - சொந்த தாயோ தகப்பனோ இறந்தால் கூட பக்கத்தில் போக கூடாது. திராட்சை ரசமோ பழமோ கொட்டையோ எதுவுமே வாயினுள் போக கூடாது, தலை/தாடி முடி வெட்டிக்கொள்ள கூடாது (எண் 6:1-12). இந்த வசனத்தை முன்னிட்டு வேதத்தை சரியாக அறியாதவர்கள் இப்படி தங்களை பெருமை படுத்திக் கொள்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவோ இந்த உலகத்தில் வாழ்ந்த போது பிணத்தின் அருகே சென்று அவர்களை உயிரோடே எழுப்பினார். திராட்சை ரசம் பருகினார். ஆனால் நசரேய விரதம் இருக்கவில்லை. அவர் நாசரேத்து ஊரிலிருந்து வந்ததாலேயே அவர் நசரேயன் என்று அழைக்கப்பட்டார் (மத் 2:23)

ஊழியர் மாத்திரம் அல்ல – கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவ ஊழியம் செய்யும் ஆசாரியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 1பேது 2:9, வெளி 1:6, 5:10, 20:6, 1பேது 2:5, ஏசா 61:6

மேலும் நியாயபிரமாணம் இப்போது இந்த உலகத்தில் நடைமுறையில் இல்லை. இயேசுவின் சிலுவை மரணத்திலேயே அது நிறைவுற்று புதிய பிரமாணம் அமுலில் வந்துவிட்டது. ரோ 10:4, அப் 13:38-39; 1கொரி 1:30; கலா 3:24; கொலோ 2:10, 2:17; எபி 9:7-14, எபி 10:8-12, 14

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; …. கலா 3:10

... எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. ரோ 3:20

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றாமல் இருந்தால் – அது கிறிஸ்தவ மேடையில் கிறிஸ்தவன் என்று சொல்லி காண்பிக்கும் மாறு வேஷம் !

உண்மையான கிறிஸ்துவை நாம் வெளி உலகிற்கு காண்பிப்போம். கலா 3:27

அப்போது சொந்த வாழ்க்கையும் பரிசுத்தமாயிருக்கும். 1கொரி 6:19-20

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக