செவ்வாய், 30 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 30 June 2020



சிரிஷ்டிப்பின் தேவனின் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக..

பிள்ளைகள் :
-ஜெபிக்காமல் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்று பெற்றோர் எப்போதும் வலியுறுத்த வேண்டும். (தானி 9:4). நாம் அல்ல அவரே பாதுகாக்கிறவர்.

-ஆசிர்வாதம் தொடரவும், புத்தியும் அறிவும் வளர வேதம் வாசிக்க வேண்டும் (யோசு 1:8, சங்119:99)

-பெற்றோரை கனம் பண்ண வேண்டும் (யாத் 20:12)

-பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் (சத்தியத்திற்கு உட்பட்டு - எபே 6:1) கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது (கொலோ 3:20)

-சங்கடங்களும், அதிருப்திகளும், தோல்விகளும், நினைத்தது நடக்காத சூழ்நிலைகளும் வந்தால் சோர்ந்து போகாமல், தேவனை நோக்கி பார்க்க வேண்டும் (எபி 12:3,5)

-தேவன் நமக்கென்று ஒரு விசேஷ திறமையை நிச்சயம் கொடுத்து இருக்கிறார். அதை உணர்ந்து அறிந்து வளர வேண்டும். (மத் 25:24)

-சோம்பலாய் முடங்கி கிடந்தால் உள்ளதும் அல்லது மொத்தமும்  இழக்க நேரிடும் (பிர 10:16)

-அவசியம் இல்லாமல் ஊர் சுற்றினால் குற்றம் செய்ய நேரிடும் (2சாமு11:2)

-ஞானத்தையும் புத்தியையும் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

-அழகானாலும், சுமாரானாலும், வெள்ளையானாலும், அழகே இல்லையென்று நீங்கள் நினைத்துக்கொண்டாலும், சிவப்போ கருப்போ, தீய்ந்து போனதோ வெந்து போனதோ – அவையெல்லாம் வெளித்தோற்றமே.... ஆனால் எந்த வித்தியாசமும் வெளித்தோற்றத்தையும் பாராமல் அனைவரையும் விசேஷமாய் நேசிக்கிறவர் தேவன் ஒருவரே (யாக் 1:5)

அவரை பற்றிக்கொண்டால் – உலகையே ஜெயிக்கலாம். 1யோ5:5

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக