ஞாயிறு, 21 ஜூன், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி - 21 June 2020

சமாதானத்தின் தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.

எவ்வளவு பணம் இருந்தாலும், கண்ணை மூடினதும் தூக்கம் வரவேண்டும் என்றால் சமாதானம் அவசியம்.  தூக்கம் இன்மை யாருக்கும் நிம்மதி இருக்காது.

சங் 127:2  நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா (வீண்); *அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்*. என்கிறார் சங்கீத ஆக்கியோன்.

சமாதானத்தை குலைப்பதில் பிசாசு வல்லவன்.

கணவனுக்கும் மனைவிக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்குள்ளே, சபையாருக்குள்ளே, சமுதாயதிற்க்குள்ளே என்று எல்லா வகையிலும் பிரச்சனைகளை தூண்டுவான்.

*சுயமும் கவுரவமும் உறவை “”ஒருநாளும்”” சீர்படுத்தாது*. நீடிய பொறுமையும் விட்டுகொடுக்கும் மனபாங்கு மாத்திரமே உறவை நீட்டிக்கும்.

நான் சரியானவன் என்று சொல்பவர்களுக்கு வேதம் சொல்வது “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோ 3:10).

இன்று வாரத்தின் முதல் நாள் !!
கர்த்தருடைய நாள் !!
கர்த்தரின் மரணத்தை நினைவுகூறும் நாள் !!

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

வேத வகுப்பு மற்றும் தேவ செய்திகள் கேட்க:
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக