புதன், 13 மே, 2020

#938 - இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்;

#938 - *இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்*; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2:24 - இந்த வசனத்தின் அர்த்தம் என்ன?

*பதில்*
திருமணம் மனித பலவீனத்திற்கான சலுகையாக உருவாக்கப்படவில்லை; மாறாக தேவ கட்டளைக்கு கீழ்படியும்படியாக என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதி. 2:17-18

கணவனும் மனைவியும் தங்கள் பெற்றோரை விட்டு கடந்து, ஒரு புதிய முன்னுரிமையான நம்பிக்கையை உருவாக்குகிறார்கள்.

பெற்றோரை விட்டு கடந்து என்றால் புதிய ஜோடி அவர்களை விட்டு தொலைதூர இடத்திற்குச் செல்வது என்று பொருள் அல்ல.

அது வரை அவர்கள் கொடுத்து வந்த முன்னுரிமையில் மாற்றத்தை இது காண்பிக்கிறது.

ஒரு நபரின் முதன்மை நம்பிக்கையானது இனி அவரது தந்தை மற்றும் தாய் அல்ல. மாறாக, வாழ்க்கைத் துணையானவரே பூமியில் மிக முக்கியமான நபராக மாறுகிறார்.

இந்த புதிய குடும்பத்தை கட்டியெழுப்ப இந்த நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானதாக இருக்கிறத.

புதிய கணவன் மனைவி இருவரும் அவரவர் பெற்றோரின் குறுக்கீட்டிலிருந்து ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டும்.

இருவரும் ஒரு புதிய குடும்பத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை உருவாக்குகிறார்கள். பெற்றோர்கள் அந்த அடித்தள கட்டிடத்தில் கணவன் மனைவிக்கு இடையில் எந்த முக்கிய பங்கும் எடுப்பதில்லை.

கணவன்-மனைவி இருவரும் இந்த புதிய பந்தத்தின் நிமித்தம் தங்கள் பெற்றோரை தாங்கள் இது வரை முதன்மையாக வைத்திருந்த பழக்கத்தை விடவேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஆண்கள், தங்கள் மனைவியை தங்கள் பெற்றோரிடமிருந்தும்; பெண்கள், தங்கள் கணவனை தங்கள் பெற்றோரிடமிருந்தும் எந்தவிதமான குற்றச்சாட்டிற்கும் பாதுகாக்கும் பொருப்பு உள்ளது.

கணவனுக்கு முதல் உரிமை தன் மனைவியும், மனைவிக்கு முதல் உரிமை தன் கணவன் மாத்திரமே. எக்காரணத்தை முன்னிட்டும் இருவருக்கும் இடையில் எவருடைய பெற்றோரும் முன்னுரிமை எடுப்பதில்லை.

திருமணத்தில் வாழ்க்கைத் துணையுடன் சேர உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாகவும், வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாகவும், அழைப்பிற்கு உண்மையுள்ளவர்களாகவும், கணவன்/மனைவிக்கு உண்மையுள்ளவர்களாகவும், உறவுக்கு உண்மையுள்ளவர்களாகவும் இருக்க இணைக்கபட்டிருக்கிறார்கள்.

இருவரும் ஒரே மாம்சமாக இருப்பதாக வேதம் சொல்கிறது. எபே. 5:31

அதாவது எப்போம் ஒன்றாக செயல்பட வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதோ அல்லது ஒருவருக்கொருவர் தன் பக்கம் இழுப்பதோ அல்ல.

இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்கும் வகையில் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

திருமணத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவர் உள்ளனர். அது இரண்டாக இருக்க வேண்டுமென்றால், ஆணும் பெண்ணும் தங்களை வளர்த்த குடும்பத்திலிருந்து தங்களை பிரித்துக் கொள்ள வேண்டும். இனி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். ஆணும் பெண்ணும் ஒரு புதிய குடும்பத்தை உருவாக்குகிறார்கள்.

திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை. மல்கியா 2:14

அந்த சபதங்கள் இரண்டு நபர்களின் வாழ்க்கையை ஒன்றிணைக்கின்றன. ரோமர் 7:2

இதன் விளைவாக இரண்டு நபர்கள் ஒரே மாம்சமாக மாறுகிறார்கள். உடல் ரீதியான அர்த்தத்தில் ஒன்றாக சேரலாம் என்பதாகும். எபிரெயர் 13:4.

நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் என்றார் இயேசு கிறிஸ்து நம் பிதாவை நோக்கி. (யோ. 17:20-21)

கிறிஸ்தவர்கள் தேவனோடும், இயேசுவுடனும், அவர்களுடைய சக கிறிஸ்தவர்களுடனும் ஒன்றாக மாறுவது போல, கணவனும் மனைவியும் ஒன்றாகிவிடுகிறார்கள்.

ஆகவே அது வரை தங்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தில் இருந்த தன் அப்பாவோ அம்மாவையோ அந்த ஸ்தானத்திலிருந்து எடுத்து தன் துணையை அந்த இடத்தில் கொண்டுவரப்படுவதால் – இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
 
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக