சனி, 25 ஏப்ரல், 2020

#905 - தன் மனைவிக்கு கூட தெரியாமல் அனனியாவை ஏன் உடனடியாக அடக்கம் செய்தார்கள்?

#905 - *தன் மனைவிக்கு கூட தெரியாமல் அனனியாவை ஏன் உடனடியாக அடக்கம் செய்தார்கள்?*

*பதில்*
நாதாபும் அபியூவும் அந்நிய அக்கினியை கொண்டுவந்த போது தேவனால் தண்டிக்கப்பட்டு சடுதியில் மரித்தார்கள் – லேவி. 10:1-7

தேவனுடைய தண்டனை அவர்கள் மீது வந்தது என்பதனால் – யாரும் *தலைப்பாகையை அகற்றாமலும் வஸ்திரங்களை கிழிக்காமலும்* இருங்கள் என்றும் அக்கினிக்காக புலம்பவேண்டும் என்றார் – லேவி. 10:6

அவர்களும் சாகாதபடிக்கு *ஆசரிப்புக்கூடாரத்தை விட்டு போகவேண்டாம்* என்றார் – லேவி. 10:7

அதாவது – *தேவனுடைய தண்டனையினால் மரித்தவருக்காக யாரும் புலம்ப வேண்டிய அவசியமில்லை, துக்கம் அநுசரிக்க அவசியமில்லை என்பதையும் தேவ வைராக்கியத்தையும் காண்பிக்கிறது*.

அதைப் போலவே அனனியாவின் சம்பவத்திற்கும் நடந்திருக்கலாம்.

மனைவி வாசலில் வந்து நின்றதுமே பேதுரு அவளிடம் கேட்கும் தொனியை கவனித்தால் விளங்குகிறது.

பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். அப். 5:8

அநுமானமாக - அனனியா மரணித்த செய்தியை ஒரு தகவலாக அவர் உறவினருக்கு சொன்னாலே போதுமானது என்று நினைத்திருக்கலாம்.

ஆகவே சபையின் வாலிபர்கள் உடனடியாக வேலையில் இறங்கியிருக்க வேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக