புதன், 4 டிசம்பர், 2019

#648 - முழு சுவிசேஷ சபை என்று சொல்லிக்கொள்கிறார்களே - விளக்கவும்?

#648 - *முழு சுவிசேஷ சபை என்று சொல்லிக்கொள்கிறார்களே* - விளக்கவும்?*

*பதில்*
இயேசு கிறிஸ்துவின் *மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல்* என்பது சுவிசேஷம் – 1கொரி. 15:1-4

இந்த சுவிசேஷத்தை கேட்டு அதற்கு கீழ்படிபவர்கள் :

*மரணம்* – பாவத்திற்கு மரித்து (ரோ. 6:11)

*அடக்கம்* – தண்ணீரில் அடக்கம் பண்ணப்பட்டு (ஞானஸ்நானம் / Baptizo) – கொலோ. 2:12

*உயிர்த்தெழ* வேண்டும் – தண்ணீரிலிருந்து வெளியே வர வேண்டும். ரோ. 6:3-4

சுவிசேஷத்திற்கு கீழ்படிகிறோம் என்று சொல்பவர்கள் – கிறிஸ்துவின் கட்டளையில் மாத்திரம் நிலை நிற்க கடமைபட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் – *முறையாக* ஞானஸ்நானம் எடுத்தவர்கள் கிறிஸ்துவை தலையாக கொண்டுள்ளனர் – கொலோ. 1:18

ஞானஸ்நானம் எடுத்தவர் தான் இரட்சிக்கப்பட்டவர்கள் (இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுப்பது வேதத்தில் சொல்லப்படாத முறை) - அப். 2:38, 47

இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவை தரித்துக்கொள்கின்றனர் – கலா. 3:27

அப்படிப்பட்டவர்களை கிறிஸ்தவரல்லாத மற்ற ஜனங்கள் பார்க்கும் போது – சபை பிரிவை அல்ல - கிறிஸ்துவை பார்க்க வேண்டும்.

முழுமை என்று தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் – மனிதர்களின் பாரம்பரியம், தங்களுக்கு ஆதாயமான பழைய ஏற்பாட்டில் மோசேயின் மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டதும் கிறிஸ்துவின் சிலுவையில் முடிவுக்கு வந்ததுமான உபதேசங்களை உதறி தள்ளி விட்டு கிறிஸ்துவின் சத்தியத்தில்  மாத்திரம் இருக்கிறார்களா என்று தங்களை ஆராய்ந்தால் எது சரி என்று புரியும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக