புதன், 20 நவம்பர், 2019

#621 - கலா. 1:18-19 மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய் - விளக்கவும்.

#621  - *கலா. 1:18-19 மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. விளக்கவும்*.

*பதில்*
காலவரிசைப்படி பவுல் தனது தொடர்ச்சியான நிகழ்வுகளை தொடுக்கிறார்.

எந்த அத்தியாவசிய நடவடிக்கைகளையும் தவிர்க்காமல் சகலத்தையும் பட்டியலிடுவதை காணமுடியும்.

மற்ற அப்போஸ்தலர்களைத் தொடர்பு கொள்வதற்கு முன்பே தான் ஒரு அப்போஸ்தலன் என்பதை குறிப்பிடுகிறார் இங்கே.

தமஸ்குவிற்கு திரும்பிய பிறகு அல்ல, இரட்சிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் எருசலேமிற்கு மறுபடியும் சென்று பேதுருவை முதல்முறையாக சந்தித்தார். மற்றும் யாக்கோபுவையும் சந்திக்கிறார். (கலா. 1:19)

அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கோ அல்லது அவர்களிடம் விசாரணை செய்வதற்கோ அல்ல. அவர் "தனிப்பட்ட முறையில் இடைபடும்படி" அங்கு சென்றார்.

மற்ற அப்போஸ்தலர் மூலமாகவோ ஞானஸ்நானம் கொடுக்க உதவிய அனனியா மூலமாகவோ இல்லாமல் சுவிசேஷத்தை நேரடியாக கிறிஸ்துவின் மூலம் அறிந்தவர் (கலா. 1:12)

மேலும் அவர் 15 நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார். (கலா. 1:18)

யாக்கோபு என்று இந்த 19ம் வசனத்தில் சொல்லப்படுபவர் – இயேசு கிறிஸ்துவின் சொந்த கூட பிறந்த தம்பி. (மரியாளுக்கு இயேசுவை தவிர வேறு பிள்ளளைகள் உண்டா என்ற விபரம் அறிய # 531ஐ படிக்கவும்)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக