செவ்வாய், 29 அக்டோபர், 2019

#588 - பிலி 1:10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி என்ற வசனத்தை விளக்கவும்.

#588 - *பிலி. 1:10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி என்ற வசனத்தை விளக்கவும்.

*பதில்*
*இயேசு கிறிஸ்துவினால் வரும் நீதியின் கனி* என்பதை நாம் மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் கிறிஸ்துவின் காலத்தில் இருக்கிறோம்.
மோசேயின் நியாயபிரமாண காலத்தில் அல்ல
முற்பிதாக்களின் காலத்திலும் அல்ல.

கிறிஸ்துவை நம் தலையாக கொண்டுள்ளோம் – எபே. 1:23, 4:15

சரீரமானது தன் தலையின் சப்தத்திற்கு தான் கீழ்படிய வேண்டும் – மற்றவர் சப்தத்திற்கு செவி சாய்தால் சீர்கெடும்.

மனைவி எப்படி தன் தலையாகிய கணவனின் சொல்லிற்கு  மாத்திரம் கீழ்படியவேண்டுமோ (1கொரி. 11:3) கிறிஸ்து எப்படி தன் தலையாகிய பிதாவினுடையதை மாத்திரம் செயல்படுத்துகிறாரோ (யோ. 15:10, 16:15) கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் தலையாகிய கிறிஸ்துவின் கட்டளைக்கே கீழ்படிய வேண்டும்.

சிலுவையில் முடித்து வைத்த 613 கட்டளைகளை பின்பற்றினால் இரட்சிப்பை இழந்து போவோம் (ரோ. 10:4, கலா. 3:10, கலா. 5:18)

அப்படியென்றால் – நீதியின் கனிகள் எவை :

சோதனைகளுக்குப் பிறகு நீதியின் கனி பெறப்படுகிறது - எபிரெயர் 12:11

கிறிஸ்துவுக்குள் வந்ததால் பழைய நடத்தையின் மாற்றம் என்பது கனிகள்  - கலாத்தியர் 5: 22-23

வரம் அல்ல - ஆவியின் கனி - எபேசியர் 5: 9

ஏராளமாக நாம் பலனளிக்க அல்ல கனியுள்ளவராயிருக்க இவைகளில் நிலைத்திருக்க வேண்டும் - 2 பேதுரு 1: 2-8

ஏழையான பரிசுத்தவான்களுக்கு உதவுதல் - ரோமர் 15: 26-28

நம்முடைய நீதியின் கனியின் விளைவு - 2 கொரிந்தியர் 9: 9-10

சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு உதவுதல், நீதியின் கனிகள் - பிலிப்பியர் 4: 16-18

நல்ல செயல்களைப் பேணுதல், நீதியின் கனிகள் - தீத்து 3:14

அப்படி செய்வது தேவனுக்கு மகிமை அளிக்கிறது - மத்தேயு 5:16

சுவிசேஷத்தின் போதனையால் நிறைவேறும்போது அது தொடர்ந்து நீதியின் கனியாகிய பலனைத் தருகிறது - கொலோசெயர் 1: 5-6

தேவனை துதிப்பது நீதியின் பலனை பெற்று தருகிறது - எபிரெயர் 13:15

ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கென்று ஆயத்தப்படுத்துவது நீதியின் கனியை பெற்று தருகிறது - யோவான் 4: 35-36

தேவனுடைய வார்த்தையை போதிப்பது / கற்பித்தல் என்பது நீதியின் கனியை உற்பத்தி செய்வதற்கான ஒரு வழியாகும் - ரோமர் 1:13

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக