திங்கள், 28 அக்டோபர், 2019

#585 - தன்னுடைய இரண்டாம் வருகை வரைக்கும் இயேசு நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்? பரதீசு போக நாம் செய்ய வேண்டியது என்ன? நியாயதீர்ப்பின் நாளை குறித்து விளக்கவும்.

#585 - *தன்னுடைய இரண்டாம் வருகை வரைக்கும் இயேசு நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்? பரதீசு போக நாம் செய்ய வேண்டியது என்ன? நியாயதீர்ப்பின் நாளை குறித்து விளக்கவும்*.

*பதில்*
இரண்டாந்தரம் கிறிஸ்து வரும்போது இந்த உலகம் முடிவிற்கு வந்து விடும் என்பதால் 2வது வருகை என்று நாம் சொல்வதை விட கிறிஸ்துவின் வருகை என்று சொல்வது சரியான பதம் என்று நான் கருதுகிறேன். எபி. 9:28, 2பேதுரு 3:10

தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் முதல் மறையாக – யோ. 1:14, 1தீமோ. 3:16

இரண்டாம் / பூமியில் இனி கடைசியாக வரப்போவது – நியாயதீர்ப்பிற்கென்று – மத். 19:28

அவருடைய வருகை எப்போது இருக்கும் என்று யாருக்குமே தெரியாது – மத். 24:36-41, மாற்கு 31:32.

ஆகவே எப்போதும் நாம் அவர் வருகை வந்தாலும் ஆயத்தமாக இருக்க வேண்டும். கறையற்றவர்களாய் எப்போதும் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் – 2பேதுரு 3:14

இரட்சிப்பின் பாதையில் எப்போதும் நடக்கும் போது – முடிவு வேளையில் அந்த இரட்சிப்பை நாம் இழந்து விடமாட்டோம் – மாற்கு 13:13

*ஒரு மனிதன் செய்ய வேண்டியவை*:
கேளுங்கள்: நற்செய்தியை கேட்க மறுத்தால் அவரை காப்பாற்ற முடியாது (ரோ. 10: 14-17; 2தெச. 2:10).

விசுவாசியுங்கள்: கேட்ட நற்செய்தியை ஒரு நபர் நம்பவில்லை என்றால் அவருக்கு எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை (யோ. 8:24; ரோமர் 5: 1-2).

கிறிஸ்துவின் பெயரை ஏற்றுக்கொள்ளவும் : ஒரு நபர் தனது வாழ்க்கையில் இயேசுவின் அதிகாரத்தை ஏற்க விரும்புவதை ஊக்குவிக்காவிட்டால் விசுவாசம் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது (ரோமர் 10: 12-13).

மனந்திரும்புதல்: அவருடைய சித்தத்திற்கு இணங்க உங்கள் வாழ்க்கையை மாற்றாவிட்டால், உங்கள் வாழ்க்கையின் மீது கிறிஸ்துவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் கூற முடியாது (அப். 3:19; 2கொ. 7: 10-11).

ஒப்புதல் வாக்குமூலம்: நம்பிக்கை அல்லது விசுவாசத்தை குறித்து உங்களிடம் இருப்பதாக ஒப்புக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை எனில், கூறப்பட்ட / நீங்கள் அறிக்கையிட்ட நம்பிக்கை உண்மையானதல்ல (மத்.10: 32-33; ரோ. 10: 8-10).

ஞானஸ்நானம் பெறுங்கள்: தேவன் ஒரு எளிய முறையைத் தேர்ந்தெடுத்தார், இதன் மூலம் அவருடைய இரட்சிப்பின் வாய்ப்பை - நீரில் மூழ்குவதை தெரிந்தெடுக்கவேண்டும்.  இரட்சிப்பு எதை குறிக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சரீர ரீதியான வெளிபாடு (ரோ. 6: 3-7; மாற்கு 16:16; அப். 2:38; 10: 47-48; 22:16; 1 பேதுரு 3:21). கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் இரண்டாம் படி – அடக்கம் !! 1கொரி. 15:4

நம்பிக்கையின் வாழ்க்கை : தேவன் நம்மைக் காப்பாற்றுவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை என்றால், அவருடைய சித்தத்தைச் செய்ய நாம் ஏன் கவலைப்படுவோம்? (ரோமர் 8:24).

கீழ்ப்படிதல்: கிறிஸ்து நமக்குக் கட்டளையிடுவதை நாம் செய்ய மறுத்தால், நம் வாழ்வின் மீது கிறிஸ்துவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது அர்த்தமற்றது (எபிரெயர் 5: 9; லூக்கா 6:46).

ஊழியம் : தேவன் நம்மைக் கட்டளையிடுவதைச் செய்ய எந்த முயற்சியும் செய்யாவிட்டால் கீழ்ப்படிதல் இருக்காது (எபே. 2:10; யாக். 2: 20-26).

நாம் ஒவ்வொருவரும் நம் பங்கைச் செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

"ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்"(பிலி. 2: 12-13).

ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2பேதுரு 3:14

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென் 2பேதுரு 3:18

இந்த வகையில் நம்மை காத்துக்கொண்டால் – கிறிஸ்துவின் வருகைக்கும் முன்னர் நமக்கு மரணம் சம்பவித்தாலும் – பரதீசு போவது நிச்சயம்.

*நியாயதீர்ப்பின் நாளை குறித்து விளக்கவும்*.
#78ல் இதற்கான பதில் உள்ளது அதை இந்த பதிவின் தொடர்ச்சியாக மறுபடியும் பதிவிடுகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக