வெள்ளி, 26 ஜூலை, 2019

#296 - தேவன் நம்மை ஐஸ்வரிமாக்குகிறவர் என்று வேதம் சொல்லி இருக்க; நீங்கள் #292 கேள்விக்கான பதிலில் – அதிக ஐசுவரியம் இருமாப்பை உண்டாக்கும் என்று சொல்லியிருக்கிறீர்களே?

#296 - *தேவன் நம்மை ஐஸ்வரிமாக்குகிறவர் என்று வேதம் சொல்லி இருக்கநீங்கள் #292 கேள்விக்கான பதிலில் – அதிக ஐசுவரியம் இருமாப்பை உண்டாக்கும் என்று சொல்லியிருக்கிறீர்களே?*

மேலும் நீதி 30:2ம் வசனத்தில் ஆகூர் தான் அறிவில்லாதவன் என்றும் சொல்கிறார் – அப்படிபட்டவரின் கூற்றாகிய 9ம் வசனத்தை நாம் எப்படி கணக்கில் கொள்வது?


*பதில்* :

ஆகூர் மாத்திரம் அல்ல,

ஆசாபும் தன்னை அறிவில்லாதவன், மிருகம் போல இருக்கிறேன் என்கிறார் (சங். 73:22)

ஏசாயா – தான் அசுத்த உதடுள்ள மனுஷன் என்கிறார் (ஏசா. 6:5)

தான் இராஜாவான போதும் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை என்கிறார் சாலமோன் (1இரா. 3:7)

*தேவனுக்கு முன்பதாக இவர்கள் தங்களை தாழ்த்தின வார்த்தைகள் இவை*.

ஆகூர் – தான் ஞானத்தை கற்கவில்லை என்கிறார் (நீதி. 30:3)

தேவனுடைய குமாரனின் நாமத்தை குறித்து வினவுகிறார் (நீதி. 30:4)

தம்மை அண்டிக்கொள்ளும் போது – தேவன் அவர்களுக்கு எல்லா பாதுகாவலையும் தருகிறவர் என்று சொல்கிறார் (நீதி. 30:5)

அவர் சொன்ன வார்த்தை ஒன்றிலும் நாம் கூட்டிவிடகூடாதென்கிறார் (நீதி. 30:6)

வேதத்தில் இருக்கும் வார்த்தைகள் தேவ ஆவியால் கொடுக்கப்பட்டவை என்று நாமறிகிறோம் (2தீமோ. 3:16)

அவை யாவும் நம் படிப்பிக்குதலுக்கானவை என்றும் அறிகிறோம் (2தீமோ. 3:17)

தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறவர். ஐஸ்வரியம் தேவனால் வருகிறது (நீதி. 10:22)

ஐஸ்வரியம் விருத்தியானால் மனிதன் தன் மனதை அதின் மேல் செலுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை சங்கீதக்காரன் மூலமாக தேவன் நமக்கு கொடுத்த ஆலோசனையை #292 பதிலில் நீங்கள் கண்டது. (சங். 62:10)

கேள்விக்காய் நன்றி பிரதர் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
 
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :

Q&A Book ஆர்டர் செய்ய :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

-------------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக