ஞாயிறு, 9 ஜூன், 2019

#205 - யார் நரகத்திற்கு செல்வார்கள்? யாரெல்லாம் பரலோகம் செல்வார்கள்?

#205 - *யார் நரகத்திற்கு செல்வார்கள்? யாரெல்லாம் பரலோகம் செல்வார்கள்?* பாவம் செய்தவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றால் பாவம் செய்யாத மனுசன் இல்லையே என்று வேதம் கூறுகிறது...

*பதில்:*
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும் அவரை எதிர்ப்பவர்களும் அவரை மறுதலிக்கிறவர்களும் ஏற்றுக்கொண்டும் - அவர் கட்டளையின்படி செய்யாத அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள்.

ஞானஸ்நானம் எடுத்து இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் - மறுபடியும் பாவம் செய்து மனந்திரும்பாதவர்களும் பரலோகம் போக முடியாது.

ஆம் – நீங்கள் சொல்வது சரியே – எல்லா மனிதர்களும் பாவம் செய்தவர்கள் தான் – செய்கிற பாவத்தை உணர்ந்து, மனந்திரும்பி, மறுபடியும் அதை செய்யாமல் விட்டு விடவேண்டும்.

உண்மையான பாதையை கண்டுபிடிக்கிறவர்கள் சிலராக தான் இருப்பார்கள் (மத். 7:14) அநேகர் போவதில்லை !!!

கர்த்தாவே கர்த்தாவே என்று கூப்பாடு போட்டாலும் பிதாவை அறியாதவர்கள் அநேகர் உண்டு !!

பிதாவும் கிறிஸ்துவும் ஒன்று என்று சொல்பவர்களும் உண்டு !!

*ஆதார வசனங்கள் கீழே :*
Mat. 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 2தெச. 1:7-8

... தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக் குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.

.... கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.

... ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், .. விட்டுவிட்ட தூதர்களையும், … அடைத்துவைத்திருக்கிறார். ..சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். யூதா 4-7

எபி. 10:29 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.

Mat. 13:41 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து,
Mat 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

Mat. 13:49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
Mat. 13:50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக