சனி, 23 ஏப்ரல், 2022

குற்றம் பிடித்தல் தேவகுணம் அல்ல

*குற்றஞ்சாட்டுவது தேவக்குணம் அல்ல*

by : Eddy Joel Silsbee

 

மன்னிப்பின் சிகரமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட பெண்ணை ஊரெல்லாம் குற்றப்படுத்தியபோது, இயேசு கிறிஸ்துவானவர், அவளை பார்த்து; “போ, *இனி பாவம் செய்யாதே”* என்றார். (யோ. 8:11)

 

38 வருஷமாய் வியாதியாய் இருந்தவனை இயேசு கிறிஸ்து குணமாக்கியதும், கேடு ஒன்றும் வராதிருக்க, *இனி பாவம் செய்யாதே* என்றார். (யோ. 5:14)

 

தன்னையே தெரியாது என சத்தியம் செய்யப்போகிறார் என்றறிந்தும், பேதுருவை பார்த்து *“நீ திடன்கொண்டபின் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்”* இயேசு கிறிஸ்து... (லூக். 22:32)

 

ஆம்..

*தவறை* சுட்டிக்காட்டி,

குற்றஞ்சாட்டுவது

தேவனுக்குரிய தன்மை அல்ல…

அதை *நினையாமலிருப்பதே அவருடைய சுபாவம்*.

 

திருந்திய பின்னரும்,

பழைய தவறுகளை எப்போதும் சுட்டிக்காட்டி

குற்றப்படுத்துவதும்,

நினைவுகூர்வதும் “*பிசாசின் செயல்*” -வெளி. 12:10

 

பழைய குற்றங்களை நினைவுப்படுத்தி இன்றும் மட்டந்தட்டும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.

 

தேவனுடைய பிள்ளைகளுக்கு அந்த குணம் ஆகாதது என்பதையறிந்து அப்படிப்பட்ட எண்ணங்களை களைந்து, கிறிஸ்துவின் அடிச்சுவட்டையே பின்பற்றுவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/nkEWZZrwzVo

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக