வெள்ளி, 7 ஜனவரி, 2022

ஜெபம் கேட்கப்பட என்ன தடை?

*ஜெபம் கேட்கப்பட என்ன தடை?*

by : Eddy Joel Silsbee

 

தான் ஒரு குற்றமும் செய்யாதிருந்தும் சிலுவையை சுமக்க செய்த போது ஜனங்கள் மீது பொறுமையாயிருந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..

 

ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே –

 

மற்றவர்களுக்கு எதிராக *நாம்* செய்த தவறுக்காக *அவர்களிடத்தில்* ஒப்புரவாக வேண்டுமாம்.. (மத். 5:24)

 

ஒருவேளை, அவர்கள்

*நமக்கெதிராய் தவறு செய்திருந்தால்*...?

 

அப்போதும் –

ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர்

      – *நாம் தான்* போய் சரி செய்ய முயற்சிக்க வேண்டுமாம் !! (மத். 18:15-17)

 

நம் ஜெபம் பரலோக தேவனிடத்தில் கேட்கப்பட வேண்டுமெனில், இந்த வரைமுறையை நமது ஞாபகத்தில் இருக்கவேண்டியவை !!

 

*எவருடைய ஜெபம் கேட்கப்படவேண்டுமோ, அவரே முதலில் தன்னை ஒப்புரவாக்கிக்கொள்ள வேண்டும்* !

 

மனிதனோடு முரண்டு பிடித்துக்கொண்டு,

இருதயத்தில் கசப்பை சுமந்துக்கொண்டிருந்தால்,

*பரிசுத்த* ஆவியானவர் அந்த இருளான இருதயத்தில் வாசமாயிருப்பதற்கு இடமில்லையே !!

 

கோபமும், சண்டையும், எரிச்சலும், முகம் சுளிப்பதும், விரோதம் பாராட்டுவதும் கிறிஸ்தவமே அல்ல. கலா. 5:20

 

தாழ்ந்துபோவதும்,

விட்டுக்கொடுப்பதும்,

பொறுத்துக்கொள்வதும்,

அமைதலாயிருப்பதுமே கிறிஸ்தவர்களின் தலையாய பண்பு. கலா. 5:22-23

 

ஒருவர் நம்மைக் காணும் போது,

நம்மையல்ல சிலுவை பரியந்தமும் தம்மை தாழ்த்தின இயேசு கிறிஸ்துவையே மற்றவர்கள் காணவேண்டும். கலா. 3:27, பிலி. 2:8

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/l1csy9Dl8SE

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக