*டிமான்ட் அல்ல வேண்டுதலே ஜெபம்!*
by : Eddy Joel Silsbee
உன்னதங்களில் வாசம் செய்யும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வர வேண்டிய ஆசீர்வாதம் அல்லது விடுதலையானது தீர்க்கதரிசனமாக உத்திரவாதமளிக்கப்பட்டிருந்த காலம் நிறைவேறுவது நெருங்கிவிட்டது என்று கணக்கிட்டு அறிந்த பிற்பாடும், தானியேல் தேவனிடத்தில் *தனது மீறுதலுக்காக மன்னிப்பு கோரினார்*. தானி. 9:2-10
ஜெபிக்கும் போது எப்போதும் தேவனிடத்தில் *நம்மை தாழ்த்த வேண்டியது அவசியம்*.
தேவனுக்கே கற்றுக் கொடுப்பது போல,
ஜெபத்தில் பிரசங்கம் செய்யக் கூடாது.
ஏற்றத்தாழ்வோடு குரலை ஜோடித்து,
வசனங்களை அடுக்கி,
'ஓ'வென்று கத்தி கூப்பாடு போட்டு, (1இரா.18:27)
உரத்த சப்தத்தில் ஜெபிக்கவேண்டிய அவசியமில்லை. (பிர. 5:2; மத். 6:7)
எவ்வளவு சப்தம் போட்டாலும் வானத்திற்கு உங்களது குரலை சேர்க்க முடியாது !!
நம்மை உண்டாக்கினவர் அவர். சங். 95:6
நாம் மண் என்பது அவருக்கு தெரியும். சங். 103:14
அடக்கத்துடன் அமைதலுடனும்,
தேவாதி தேவனிடத்தில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து பயபக்தியோடு அவரிடம் நாம் *வேண்டுவது* அவசியம்.
*டிமான்ட் அல்ல வேண்டுகிறோம் அல்லது கெஞ்சுகிறோம்* என்பதை நினைவில் கொள்ளவும் !!
ஜெபம் என்றால் வேண்டுதல் !!
அவசியத்தை தெரியப்படுத்த ஒரு கடமைக்காக வேகம் வேகமாக ஜெபித்து விட்டு ஓடி விட கூடாது.
விண்ணப்பங்களின் பலனை பெற்றுக்கொள்ள துதியும், ஸ்தோத்திரங்களும் சேர்ந்து சமர்பிக்க வேண்டும் (பிலி. 4:6)
தாழ்மையுடன், வேண்டுதலுடன், கீழ்படிதலுடன் ஏறெடுக்கும் ஜெபம் அவருடைய கிருபையை பெற்றுத்தரும். எஸ்றா 10:1, யாக். 4:8; 4:10; 5:16; 1யோ. 3:22; 5:14-15
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/9xuYtzSJAF0
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக