*புத்திசாலியான பொய்காரன்*
By : Eddy Joel Silsbee
வாக்கு மாறாத தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஏற்ற நேரத்தில்,
*உள்ளதை இல்லை* என்றும்; *இல்லாததை உள்ளது* என்றும் சொல்பவர்களை *புத்திசாலி* என்று காலம் தன்னை மெச்சிக்கொள்கிறது.
கிறிஸ்துவை அறிந்தவர்களையும் பிசாசு இந்த பழக்க வலைக்குள் சிக்க வைத்திருக்கிறான்.
அளவாய் பேசுவதும்,
சரியாய் பேசுவதும்,
முறையாய் பேசுவதும்,
சொன்னதை மாற்றி பேசாமலும்,
உள்ளதை தவறாய் சொல்லாமலும் -
நம்முடைய ”வாக்கை” உறுதியாகவும் செம்மையாகவும்
காலத்திற்கும் நபருக்கும் ஏற்றார்போல் வார்த்தையை மாற்றாமல், உண்மையை மறைக்காமல், பாதியை சொல்லி மீதியை மறைத்து சொல்லாமல் உள்ளதை அப்படியே சொல்வது உத்தமம்.
வசனங்கள் இப்படியாய் உள்ளது :
புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் – நீதி. 17:20
அலப்புகிற மூடன் விழுவான் – நீதி. 10:10
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும் – பிர. 10:12
நம் அப்பா வாக்கு மாறாதவர்…
அவர் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போலவே வாக்கைமாற்றாமல் இருப்போம். 1பேதுரு 1:15-16, 1தெச. 1:2-4
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/gBHlp_Qw5pc
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக