புதன், 29 செப்டம்பர், 2021

கிறிஸ்துவில் ஜெயம்

*கிறிஸ்துவில் ஜெயம்*

By : Eddy Joel Silsbee

 

சகாயராகிய தேவன் நம்மை இன்னும் பெலப்படுத்துவாராக.

 

மூச்சு சரீரத்தில் தங்கும் வரை தான் *போராட்டம்*.

அது போலவே *சமாதானம்* என்பதும் நாம் கிறிஸ்துவோடு இருக்கும் வரை தான்.

 

இந்த உலகத்தில் போராட்டம் உண்டு என்று கிறிஸ்து சொன்னார். யோ. 16:33

 

நேருக்கு நேராக நம்மை எதிர்ப்பவர்களை விட, மறைமுகமாக தன் அதிகாரத்தினாலும் பலத்தினாலும் தாக்குபவர்களையும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். எபே. 6:12

 

எளிமையான நாம் *உலகத்தாரை ஜெயிக்க வேண்டுமெனில்*  கிறிஸ்துவுக்குள்ளாக பொதிந்து கொள்ளவேண்டும். கலா. 3:27

 

அவருடைய அரவணைப்பு இல்லாமல் நமக்கு நிம்மதி கிடையாது.

 

எதிர்ப்பவர்களை வீழ்த்துகிற ஆயுதம் எப்போதும் தயாராக நம் வாயில் இருக்க வேண்டும். எபே. 6:17

 

வேத வசனமே நம்மை ஆறுதல் படுத்தும். அதை தாவீது நன்கு உணர்ந்திருந்தார் (சங். 119:92)

 

துக்கம் தொண்டையை அடைக்கும் போது, தேவனை நோக்கி நம் முழங்கால் மடங்கினால் கிறிஸ்துவின் அன்பு வெளிப்படும். மத்தேயு 28:20 பிற்பகுதியும் சங். 91:15 வாசித்துப் பார்க்கவும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/AESfRIaavqs

*Please Subscribe & Watch* our YouTube Videos

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக