செவ்வாய், 28 செப்டம்பர், 2021

உயருவதற்கு “முதல்படியே கீழ்படிதல்”

*உயருவதற்கு “முதல்படியே கீழ்படிதல்”*

By : Eddy Joel Silsbee

 

வானத்திலும் பூமியிலுள்ள சகலத்தையும் குறிப்பாக நம் னைவரையும் சிருஷ்டித்த தேவன் தாமே நம்மை தொடர்ந்து ஆதரிப்பாராக.

 

அனைத்து முயற்சியும் வீணாகி விட்டதே,

எவ்வளவு முயன்றும் பிரச்சனையை கடந்து வர முடியவில்லையே என்று கலங்கி ஓரமாய் நிற்கும் போது,

யாரிடத்தில் போய் நாம் முறையிட்டாலும்,

தங்கள் அனுதாபத்தை மாத்திரமே காண்பிப்பார்களேயன்றி - நமக்கு உதவுவதோ, ஆதரிப்பதோ, ஒத்தாசையாக கூடவே இருப்பதோ வெகு சிலரே.

 

நேரடியாய் கண்டிராவிட்டாலும்,

வார்த்தையின் மூலம் கேள்விப்பட்டு,

நம்பிக்கையை மாத்திரமே நாம் கொண்டிருந்தாலும்;

இரட்சகராகிய ஆண்டவரோ நம்முடைய கண்ணீரையும்,

இருதயத்தின் பாரங்களையும் கண்டு, உணர்ந்து, சீர்செய்து, அதை சரி செய்பவர். ஏசா. 63:9, சங். 145:19

 

உலகத்தில் இருக்கும் “எந்த” அல்லது “எப்படிப்பட்ட” பிரச்சனையாய் இருந்தாலும், அதை அவரால் சரி செய்ய முடியும் !! சங். 106:44-46

 

அவர் எல்லோரையும் விட பெரியவர் (1யோ. 4:4)

 

அவருக்கு செவிசாய்த்து,

வார்த்தைக்கு கீழ்படிந்து,

சொந்த இருதயத்தை சுத்தம் செய்யும்போது சகலமும் சீர்படும். மத். 5:8

 

அவர் வார்த்தைக்கு கீழ்படியாமல் தேவன் நமக்கு நன்மை செய்யவில்லையே என்று புலம்புவது பயனற்றது. மீட்பிற்கான அடிப்படை விசுவாசத்திற்கு தேவையானதை முதலில் சரியாய் செய்யவும். மீதம் தானாக நன்மையாய் மாறும் ! அப். 22:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/PGp61znuRRA

*Please Subscribe & Watch* our YouTube Videos

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக