செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தேவ ஞானமே முக்கியம்

*தேவ ஞானமே முக்கியம்*

by : Eddy Joel Silsbee

 

சகல பொக்கிஷதிற்கும் ஊற்றுக்கண்ணாகிய நம்முடைய தேவகுமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

புத்தியாய் ஒரு காரியத்தை ஒருவர் செய்துவிட்டாலோ, தவிர்த்துவிட்டாலோ, அதை அவர் ஞானமாய் செய்து விட்டதாகவும் அவர் ஞானவான் என்றும் மெச்சிக்கொள்கிறோம்.

 

ஆனால் ஞானத்தை இரண்டு வகையாக வேதாகமம் பிரிக்கிறது.

 

பிரிவினை,

கசப்பு,

வைராக்கியம்,

விரோதம்,

பெருமை போன்றவை எல்லாம்

*உலக ஞானத்தில்* உருவாகிறதாம் ! (யாக். 3:11-15)

 

*தேவனிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஞானமோ* நம்மை :

சுத்தமுள்ளதாயும்,

சமாதானத்தோடும்,

சாந்தமும்,

பிரிவினை இல்லாமலும்,

பட்சபாதம் இல்லாமலும்,

போலித்தன்மை இல்லாமல் மெய்யானதாயும் இருக்கிறது. யாக். 3:17

 

உலக ஞானம் நம்மை கலகப்படுத்தி அழிவிற்கு கொண்டு செல்கிறது… யாக். 3:16

 

தேவ ஞானமோ நம்மை நித்தியத்தில் சேர்க்கிறது.

 

*தேவ ஞானத்தையே பெற்றுக்கொள்ள நாடுவோம்* (யாக். 1:5)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/8H7WSBhK7R4

 

*Please Subscribe & Watch our YouTube Videos*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக