*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 20 June
by : Eddy Joel Silsbee
நம்மை படைத்த தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.
சுமாராக நம்முடைய *முதல் 25 வருடம் படிப்பிலும் அடுத்த 25 வருடம் வேலையிலுமாக* 50வயது கழிந்து விடுகிறது.
சம்பாதித்ததை உட்கார்ந்து அனுபவிக்க மீதம் 10 அல்லது 15 வருடங்கள். அதுவும் பெரும்பாலும் பராமரிப்பு என்ற போராட்டத்திற்கே சரியாகிவிடும்.
இந்த *சொற்ப ஆயுளுக்காக இவ்வளவு கஷ்டபடுகிறோம்*.
ஆனால், முடிவில்லா நித்திய ஆயுளுக்காக வேண்டியதை செய்தாயிற்றா?
வேதம் எப்போதும் அதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ரோமர் 10:9-13, யோவான் 3:16
நித்திய ஆயுளா அல்லது நித்திய அழிவா என்பது *நம் கையில் உள்ளது*.
நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்துவே வழி.
யோவான் 14:6.
பாதை தவறினால் வேறே இடத்திற்கு *பத்திரமாய்* கொண்டு போகப் படுவோம். யோவான் 8:24, மாற்கு 16:16.
இந்த மண் சரீரத்தை விட்டு நாம் பிரியும் போது எந்த அளவிற்கு தகுதி பெற்றோமோ அதன் அடிப்படையில் தான் கொண்டு போய் விடப்படுவோம்.
நினைத்த இடத்திற்கு அப்போது நம்மால் போக முடியாது. வேறொவர் தான் கொண்டு செல்வார். லூக்கா 16:22
ஆகவே *சரியான ஹால் டிக்கெட்டை இன்னும் எடுக்கவில்லையென்றால் இன்றும் நேரம் உள்ளது*. காலம் தாழ்த்த வேண்டாம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக