*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 8 June
by : Eddy Joel Silsbee
பரிசுத்தப்படுத்தும் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
என்ன தான் பவுல் சொல்றார்னு கேட்போமே என்ற ஆர்வத்தோடு அகிரிப்பா ராஜா கேட்க துவங்கினார். (அப். 25:22)
ஆனால் பவுல் பேசுகிறதை கேட்க கேட்க தமக்கு உறுத்தலாகவும் தன் பழக்க வழக்கத்தை திருத்திக்கொள்ளும்படியான விஷயங்கள் உணர்த்தப்பட்டாலும், பழைய பாதையை விட்டு அவரால் வர முடியவில்லை. (அப். 26:28)
பல நேரங்களில் நமக்கும் அப்படி ஆகிவிடுகிறது.
வேதம் படிக்கும் போதோ, கர்த்தருடைய செய்தி கேட்கும் போதோ, உணர்த்தப்பட்டால் நம்மை நாமே திருத்திக்கொள்வதற்கு பதிலாக வெளியேறி விடுவதும் எதையாவது சொல்லி சமாளித்து விடுவதுமாக தப்பித்துக்கொள்கிறோம்.
தேவச் சட்டமானாலும்,
தேசச் சட்டமானாலும்,
மீறி நடந்து பிடிக்கப்படும்போது தண்டனை நிச்சயம் !!
எத்தனை சுகம், எவ்வளவு பெரிய லாபம் அல்லது பிரதானமான பொறுப்பில் இருந்தாலும் உதறி போட்டு வேதத்தின் ஒழுங்கிற்கு திரும்ப வேண்டும்.
இக்கால சுகம் நித்திய வேதனை !!
மீட்பராகிய இயேசு கிறிஸ்துவோ நம் இருதயத்தின் கதவை எப்போதும் தட்டி கொண்டே தான் இருக்கிறார். வெளி. 3:20
ஆராதனை என்றும்,
எழுப்புதல் என்றும் இக்காலத்தில் எழுப்பப்படும் இரைச்சலில், உன்னதத்தின் மெல்லிய சப்தத்தை கேட்க விடாமல் பண்ணிவிடுகிறதோ? 1இரா. 19:12, யோபு 4:16, அப். 2:3-37
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக