*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 2 June
by : Eddy Joel Silsbee
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
பாவத்திலிருந்தும், சாபக்கட்டுகளிலிருந்தும் விடுபட இயேசு கிறிஸ்து ஒருவரே வழி.
ஆலயத்தை தொட்டு கும்பிடுவதலோ,
கோயிலினுள் இருக்கும் “சாமி தண்ணீர்” என்று வைக்கப்பட்டதை மொண்டு குடிப்பதாலோ,
டிவியிலும் யூ- ட்யுபிலும் வரும் செய்திகளை சதா கேட்பதாலோ ஒன்றும் நடந்துவிடாது.
எதில் கீழ்படியாமல் முரட்டாட்டம் பிடிக்கிறோம் என்று யோசித்து, உணர்ந்து,
மனம் மாறி,
தேவனிடத்தில் வர வேண்டும்.
தேவனுடைய வீடு அல்லது பெத்தேல் என்று பெயர் வைத்துக்கொண்டாலும் பிரயோஜனம் இல்லையாம்.
கிறிஸ்துவை தேடி அண்ட வேண்டும்.
அப்போது தான் விடுதலையும்,
குடும்பத்தில் ஆசீர்வாதமும்,
இரட்சிப்பும் உண்டு.
ஆதார வசனம்:
பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும். *கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்*; என்றார் - ஆமோஸ் 5:5-6
ஆம்… பெரிலோ, வெளியரங்கச் செயலிலோ அல்ல.
வசனத்திற்கு செவிசாய்த்தலும்,
கீழ்படிதலுமே அவசியம்.
கர்த்தரிடம் உத்தமமாய் அனுகுவோம். நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
You-Tube : https://youtu.be/mEEFPKpgVLA

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக