ஞாயிறு, 16 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 16 May 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 16 May 2021
by : Eddy Joel Silsbee

சகல கிரியையையும் மேன்மையாய் நடப்பிக்கிற கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வேலை செய்வதும், உழைத்து சாப்பிடுவதும், *சாபம் அல்ல, அது ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதம்*.

ஏதேன் தோட்டம் துவங்கின காலம் துவங்கி, மனிதன் பாவம் செய்யும் முன்பே (ஆதி. 2:15), *மனுஷனை வேலை செய்ய கட்டளை கொடுத்தார் தேவன்*.

சரீர ஆரோக்கியம் இருந்தும் ஒரு வேலையும், எந்த காரணமுமின்றி, சோம்பலாய் எந்த ஆண்களும் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருப்பது தகாதது. அந்த வீடு வளர்ச்சி காணாது. பிர. 10:18

நீதிமொழிகளின் மூலம் ஆவியானவர் சொல்லுவது... வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, *பின்பு உன் வீட்டைக் கட்டு*. (நீதி. 24:27)

காலையிலும் மாலையிலும் வேலை செய்ய நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். பிரசங்கி 11:6

சம்பாத்தியத்தை சேமிக்கும்படியான கட்டளை இருக்கிறது. யோ. 6:12...

சூரியன் அஸ்தமிக்கும் போது, நாம் ஓய்வு எடுக்கும் நேரம். ஆதி. 15:12, உபா. 23:11

நம்முடைய பிரயாசத்தை, தேவன் கணக்கில் வைத்து அதை நிறைவேற்றுகிறார். பிர. 3:13, சங். 128:2, ஏசா. 62:8

ஆசீர்வாதம் நமக்கென்று முன்னமே வைக்கப்பட்டிருகிறது.
நாம் பிரயாசப்படும் போது, அதை அடைகிறோம்...எபி. 6:10

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக