
*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
ஆராதனைக்கு ஒரே பாத்திரமான நம் பரலோக பிதாவின் நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.
உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் என்று *டமாரம் அடித்து விளம்பரம்* தேடிக்கொள்ளும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது என்பதால்;
ஜெபம் பண்ணும்பொழுது தன் அறையை *பூட்டிக்கொண்டு உள்ளே அந்தரங்கமாக* ஜெபிக்க சொன்னார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. மத். 6:6
இரகசியமாய் ஏறெடுக்கும் ஜெபம் வெளியரங்க பதில் பெற்று தருகிறது. மத். 6:6
கதவை பூட்டிக்கொண்டு அல்லது கைபேசியை அனைத்து விட்டு ஜெபிக்கும் பழக்கம் இருந்தால், ஜெபித்து முடிக்கும் வரை எந்த தடைகளும் இல்லாமல் கவனம் சிதறாமல் ஜெபிக்கமுடியும்.
தொழுகைக்கு புறப்படும் நேரத்தில், விருந்தினர் அல்லது நண்பர் வந்தாலும் கூடுகைக்கு செல்வது தடையாக நினைக்காமல், அவர்களையும் கூட்டி செல்லுங்கள்.
கம்பெனி முதலாளி அழைத்தால் நேரம் காலம் பாராமல் விழுந்து பிடித்து ஓடுவதற்கு முற்படும்பொழுது, பரலோக தேவனின் கட்டளைக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்கிறோம்?
ஜெபமும், ஆராதனை பங்களிப்பிற்கும் ஒரு போதும் சாக்கு போக்கு சொல்லவேண்டாம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக