*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் படைத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
(1) விசுவாசித்து,
(2) இரட்சிக்கப்பட்டு
(3) ஞானஸ்நானம் எடுத்தவர்கள் அநேகர்.
இரட்சிக்கப்பட்டு வருஷங்கள் கடந்துவிட்டது,
ஞானஸ்நானத்தை குறித்து ஆண்டவர் இன்னமும் வெளிப்படுத்தாததால் காத்து இருப்பதாக பலர் சொல்வதை இப்போது பெருமையாக நினைத்துக்கொள்கிறார்கள்.
வேதத்தை படித்தால்,
(1) விசுவாசித்து
(2) ஞானஸ்நானம் பெற்றவர்கள் தான்
(3) இரட்சிக்கபடுகிறார்கள் என்று எழுதியிருக்கிறது !! (மாற்கு 16:16)
உபயோகிக்க வேண்டிய முறையை,
கொடுக்கப்பட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு புத்தகத்தை (Operations & Maintenance Book) *வாசித்து உபயோகிக்கும் போது தான்*
வாங்கிய பொருளை முறையாக பத்திரப்படுத்தமுடியும்.
அதுபோல, விசுவாசத்தில்
சொல்லப்படுவதில்
எது ஒரிஜினல்,
எது டூப்ளிகேட்,
என்று துல்லியமாய் கண்டுபிடிக்க,
தங்கள் கையில் உள்ள கையேட்டை (வேதத்தை) ஒப்பிட்டு பார்க்கவும்.
அப். 2:38ல் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களே, கீழே 47ம் வசனத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று வேதம் அழைப்பதை கவனிக்க தவறிவிடக்கூடாது.
விசுவாசித்தால், வாயினால் அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்று ரோமர் 10:9-10ஐ மாத்திரம் தனியாக வாசித்து இரட்சிப்பை இழந்துவிடாதீர்கள். அதற்கு மேலேயுள்ள வசனங்களையும் (வ5-6) கவனிக்கும் போது, நியாயபிரமாணமா விசுவாசப்பிரமாணமா என்ற கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் பவுல் !!
ஆகவே, விசுவாசமுள்ளவன் ஞானஸ்நானம் பெறும் போது இரட்சிக்கப்படுகிறான் என்கிற கட்டளையை, நம் சவுகரியத்திற்கு மாற்றுபவர்களை நம்பி சொந்த ஆத்துமாவை நஷ்டபடுத்திவிட வேண்டாம்.
கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்படிவது அவசியம். மத். 28:18-20
அவர் வார்த்தை நம்மில் இருந்தால், நம் ஜெபம் கேட்கப்படும். யோ. 15:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக