*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
வார்த்தையாகிய நம் ஆண்டவரின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
சபையில் கொடுக்கப்படும் செய்தி,
சபையாருக்கு பிரயோஜனமாகவும்,
விசுவாசத்தில் வளரும்படியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
பேசுபவர் எந்த சூழ்நிலையினாலும் நெருக்கப்பட்டு துவண்டு போய் கடமைக்கு ஏதோவென்று நேரத்தை கடத்தி போகாதபடிக்கு, பரிசுத்த ஆவியானவர் அவரை இன்னும் அதிகமாய் பயன்படுத்த,
சபையார் எப்போதும் வார்த்தைக்காகவும், பேசுபவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். (எபே. 6:19-20)
கேட்பவர்கள் ஒவ்வொருவரும், கொஞ்சமாகிலும் அன்று புதியதாக வேதத்தின் இரகசியங்களில் தெளிவுபெற வேண்டும் என்றும், அதினால் அவர்கள் விசுவாசத்தில் வளர வேண்டுமே என்ற தாகம் ஊழியர்களுக்கு இல்லாவிடில் சபை கோமாவில் இருப்பது உறுதி.
கூடும் வேளையில், இயேசு கிறிஸ்து நம் மத்தியில் இருக்கிறார் என்ற உணர்வு இருந்தால், அதற்கேற்ற பயமும், மரியாதையும் தானாக வரும்.
கேட்பவர்களும், பேசுபவர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்யும்போது, தேவன் மகிமைப்படுவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK
-*--*--*--*--*--*--*--*--
புதன், 27 ஜனவரி, 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி, 27 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக