தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
"தடை வந்தால்" அது சாத்தான் மூலமாக தான் என்றும்,
"நினைத்தது நடந்தால்" அது தேவ செயல் என்றும்,
நம் மனம் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது.
வானத்திலிருந்து *தேவனுடைய* அக்கினி வந்து ”ஆடுகளையும் வேலையாட்களையும்” எரித்துப்போட்டது என்று வேலைக்காரன் சொன்ன போதும்;
”பிள்ளைகள் முதற்கொண்டு சகலத்தையும் இழந்து” அதோகதியாய் நின்ற வேளையிலும் யோபு ”*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*“ என்றார் !! யோபு 1:16
”வந்த” எந்த சூழ்நிலையும் தேவன் அனுமதிக்காமல் நடக்காது என்பதில் அவர் நிச்சயம் கொண்டிருந்தார்.
யோபுவின் அந்த பொறுமையை நாம் கற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவரால் நாம் ஊக்கிவிக்கப்படுகிறோம். (யாக் 5:11)
எந்த எதிர் வினையும்;
தற்காலம் கஷ்டத்தை கொடுத்தாலும்,
பிற்காலத்தில் தேவன் தான் அதை நமக்கு அனுமதித்தார் என்பதை நாம் உணருவோம் (எபி 12:11)
பொறுமையாய் இருப்போம்...
தேவனை மாத்திரம் பற்றிக்கொண்டிருக்கவேண்டும் !!
சகலமும் நன்மைக்கே !!
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக