வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 21 Aug 2020

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

அன்பின் தேவன் தாமே நம் அனைவரையும் சீர்ப்படுத்துவராக.

 

சில கலிலேயர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று இயேசு கிறிஸ்துவிடம் சொன்ன போது – நீங்கள் இன்னும் உயிரோடு இருப்பதினால் மோசமானவர்கள் தான் கொலை செய்யப்படுகிறார்கள் – நீங்கள் நல்லவர்கள் என்று நினைக்க வேண்டாம் என்றார் (லூக் 13:1-5)

 

பல நேரங்களில் நமக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது.

 

யாராவது பிரச்சனையில் இருந்தால், “என்னா ஆட்டம் போட்டான், அதான் ஆண்டவரா பாத்து அவனுக்கு தண்டன கொடுத்துட்டாருன்னு” சொல்லி விடுவோம்.

 

மற்றவர்கள் துன்பம் அனுபவிக்கும் போது, நாம் ஒரு போதும் சந்தோஷப்பட கூடாது.

 

மாறாக, நமக்கும் அப்படி ஒரு சூழ்நிலையோ அல்லது இன்னும் அதிகமாகவோ எந்த நேரத்திலும் வரலாம் என்று தெய்வ பயத்தோடு இருப்போம்.

 

கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

 

அவர்கள் நம்மிடம் சொல்லாவிட்டாலும், உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் என்று தம்பட்டம் அடிக்காமலும், உத்தமமாய் ஜெபிக்கும் போது, நிச்சயம் அதன் பலன் நம்மையும் வந்து சேரும்.

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:

https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக