*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
சிலுவை மரணத்தினால் நம்மை மீட்டு எடுத்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசுவானவர் - இந்த உலகத்தில் வந்தது,
யூதர்கள் அவமானப்படுதினபோது பொறுமையாய் இருந்தது,
தான் யார் என்று நிரூபிக்க கடைசி தருணத்தில் சவால் விடப்பட்ட போது கூட அமைதியாய் இருந்தது,
சிலுவை பாடுகளின் போது,
தன் சிலுவை மரணத்தின் கடைசி தருவாயிலும்,
இப்படி எந்த செயலையுமே தன்னுடைய விளம்பரத்திற்காக செய்யவில்லை.
“இவர்களை மன்னியும்” என்று பிதாவினிடத்தில் வேண்டினதும் தனக்காக அல்ல!!
அவர் சரீரத்தில் எத்தனை தழும்புகள்,
எத்தனை வடுக்கள்,
எத்தனை அவமான சின்னங்கள்,
எத்தனை நிந்தனைகள்...
எதுவும் தனக்காக அல்ல – எ...ல்....லா...ம் அனைத்துலக மக்களுக்காகவே.... நமக்காய் மாத்திரமே ! மத் 8:17, யோ 1:29
கிறிஸ்துவை பின்பற்றுகிற நாம் - எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு எவ்வகையிலும் இடறல் உண்டாக்குபவர்களாய் இருக்கவே கூடாது. பிலி 1:11, 2கொரி 6:3, 1கொரி 10:33
நாம் இயேசுவையும் அவர் அடிச்சுவட்டையும் பின்பற்றுகிறவர்களாயிருக்கிறோம். 1 பேது 2:21
சுய சந்தோஷத்திற்காக மாத்திரம் வாழ்ந்தால் – அது கிறிஸ்தவம் அல்ல !! 2 தீமோ2:3, 1பேது 3:17; 4:19
சிலுவையை சுமந்து கொடிய மரணத்தை நமக்காய் தழுவிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படியாக அவர் உயிர்தெழுந்த கர்த்தருடைய நாள் இன்று !! தேவனைத் தொழுது கொள்ளும்படி இன்று சபையாக கூட சாக்கு சொல்லவேண்டாம்..
கர்த்தருடைய நாள் இன்று !!!
சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேவன் தாமே அருளுவாராக. கலா 1:3
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக