திங்கள், 2 டிசம்பர், 2019

#638 - தேவன் தான் நமக்கு வேலை தருகிறார் என்று நான் அறிகிறேன். ஆனால் பெரும்பாலான கம்பெனி முதலாளிகள் லஞ்சம் கொடுத்து டென்டர் எடுத்து வரும் பணத்தில் சம்பளம் கொடுக்கிறார்கள். அதை எப்படி பார்ப்பது?

#638 - *தேவன் தான் நமக்கு வேலை தருகிறார் என்று நான்  அறிகிறேன். ஆனால் பெரும்பாலான கம்பெனி முதலாளிகள் லஞ்சம் கொடுத்து டென்டர் எடுத்து வரும் பணத்தில் சம்பளம் கொடுக்கிறார்கள்*. அதை எப்படி பார்ப்பது?

*பதில்*
செய்த வேலைக்கான கூலியை பெறுவது சம்பாத்தியம்.

செய்யும் வேலை – நேர்மையானதாக இருத்தல் அவசியம் 2 இரா. 12:15, தானி. 6:4.

துரிதமாக செய்தல் அவசியம்  - நீதி. 6:6-8, ரோ. 12:11

குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்ய வேண்டும் எபே. 4:28

புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, …. அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், … சொந்த அலுவல்களைப்பார்க்கவும், … சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டும் – 1தெச. 4:11-12

மற்றவருக்கு கொடுக்கப்படும் கூலியை தன்னுடைய கூலிக்கு ஒப்பிட்டு பாராமல் தனக்கு பேசப்பட்ட கூலி கிடைத்த போது முறுமுறுக்காமல் இருக்க வேண்டும் மத். 20:12

தேவன் இந்த வேலையை கொடுத்தால் என்று உணர்ந்து எஜமானனுக்கு உத்தமமாய் வேலை செய்ய வேண்டும் கொலோ. 3:22-24

கையில் பெற்றுக்கொள்ளும் கூலி அவரவர் செய்த வேலைக்காக என்பதை உணரவேண்டும்.

மற்றவர் நம் வழியாக தவறு செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும் சங். 50:16-18

மற்றவர்கள் செய்யும் தவறான காரியத்திற்கு நாம் உடன்பட கூடாது 1தீமோ. 5:22

தவறான செய்கையில் ஈடுபடுவர்களை அங்கீகரிப்பவன் / ஆமாதிப்பவன் / வாழ்த்துகிறவன் / போற்றுகிறவன் அவரின் செய்கைக்கும் பங்காளனாகிறான் 2யோ. 11

மற்றவர்களுக்கு துன்பம் அல்லது பாவம் செய்ய தூண்டும் தவறான வேலையில் ஈடுபடகூடாது எபே.  4:28

எந்த வேலை செய்தாலும் முழு பெலத்தோடு செய்ய வேண்டும் பிர. 9:10

கொடுக்கப்பட்ட வேலையை ஜாக்கிரதையுடனும் திறமையுடனும் செய்ய வேண்டும் நீதி. 22:29

உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் 1கொரி. 4:2, லூக்கா 16:10-12

மோசம் போக்காமல் உத்தமாக வேலை செய்ய வேண்டும் லேவி. 19:35

இவ்வாறு செய்து கிடைக்கும் பலன் நமக்கு ஆசீர்வாதம். எஜமானனுக்கு கிடைக்கப்பெறும் பணம் தவறான வழியில் இருந்தால் அதற்கான கூலியை அவர் தரவேண்டி வரும் நீதி. 22:16, மல்கி .3:5, யாக். 5:4

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக