திங்கள், 2 டிசம்பர், 2019

#638 *கேள்வி* தேவன் தான் நமக்கு வேலை தருகிறார் என்று நான் அறிகிறேன். ஆனால் பெரும்பாலான கம்பெனி முதலாளிகள் லஞ்சம் கொடுத்து டென்டர் எடுத்து வரும் பணத்தில் சம்பளம் கொடுக்கிறார்கள். அதை எப்படி பார்ப்பது?

#638
*கேள்வி*
தேவன் தான் நமக்கு வேலை தருகிறார் என்று நான்  அறிகிறேன். ஆனால் பெரும்பாலான கம்பெனி முதலாளிகள் லஞ்சம் கொடுத்து டென்டர் எடுத்து வரும் பணத்தில் சம்பளம் கொடுக்கிறார்கள்.

அதை எப்படி பார்ப்பது?

(Original Question)
Dear Bother.. Thanks for your message.. I have a doubt..

Yes I do agree that God has given this Job to us. But as we work with higher management we always come to know that Companies/Owners give bribe to secure jobs/ tenders.

To me.. I couldn't digest it.. throughout that job it gives me immense pain in my heart..saying.."This job our company got thru bribe"..

what is the solution to it.. sometimes I feel..that I need to quit.. what is Ur advise bro..??

*பதில்*

செய்த வேலைக்கான கூலியை பெறுவது சம்பாத்தியம்.

செய்யும் வேலை – நேர்மையானதாக இருத்தல் அவசியம் 2 இரா 12:15, தானி 6:4.

துரிதமாக செய்தல் அவசியம்  - நீதி 6:6-8, ரோ 12:11

குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்ய வேண்டும் எபே 4:28

புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, …. அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், … சொந்த அலுவல்களைப்பார்க்கவும், … சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டும் – 1தெச 4:11-12

மற்றவருக்கு கொடுக்கப்படும் கூலியை தன்னுடைய கூலிக்கு ஒப்பிட்டு பாராமல் தனக்கு பேசப்பட்ட கூலி கிடைத்த போது முறுமுறுக்காமல் இருக்க வேண்டும் மத் 20:12

தேவன் இந்த வேலையை கொடுத்தால் என்று உணர்ந்து எஜமானனுக்கு உத்தமமாய் வேலை செய்ய வேண்டும் கொலோ 3:22-24

கையில் பெற்றுக்கொள்ளும் கூலி அவரவர் செய்த வேலைக்காக என்பதை உணரவேண்டும்.

மற்றவர் நம் வழியாக தவறு செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும் சங் 50:16-18

மற்றவர்கள் செய்யும் தவறான காரியத்திற்கு நாம் உடன்பட கூடாது 1தீமோ 5:22

தவறான செய்கையில் ஈடுபடுவர்களை அங்கீகரிப்பவன் / ஆமாதிப்பவன் / வாழ்த்துகிறவன் / போற்றுகிறவன் அவரின் செய்கைக்கும் பங்காளனாகிறான் 2யோ 11

மற்றவர்களுக்கு துன்பம் அல்லது பாவம் செய்ய தூண்டும் தவறான வேலையில் ஈடுபடகூடாது எபே 4:28

எந்த வேலை செய்தாலும் முழு பெலத்தோடு செய்ய வேண்டும் பிர 9:10

கொடுக்கப்பட்ட வேலையை ஜாக்கிரதையுடனும் திறமையுடனும் செய்ய வேண்டும் நீதி 22:29

உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் 1கொரி 4:2, லூக்கா 16:10-12

மோசம் போக்காமல் உத்தமாக வேலை செய்ய வேண்டும் லேவி 19:35

இவ்வாறு செய்து கிடைக்கும் பலன் நமக்கு ஆசீர்வாதம். எஜமானனுக்கு கிடைக்கப்பெறும் பணம் தவறான வழியில் இருந்தால் அதற்கான கூலியை அவர் தரவேண்டி வரும் நீதி 22:16, மல்கி 3:5, யாக் 5:4


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக