#556 - *முதல் பாவம் முதல் பொய் மூலம் இந்த உலகத்திற்கு
வந்தது*..
ஆகையால் என் கேள்வி - பொய்யை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது
பொய்யால் உண்டாகும் தீமை என்ன / அல்லது தண்டனை
என்ன விளக்கம் கொடுங்கள் பிரதர்...
*பதில்*
பொய்
சொல்வதை கர்த்தர் வெறுக்கிறார் என்பதை அவர் வெறுக்கும் பட்டியலில்
நாம் காணமுடியும். நீதி 6: 16-19.
மேலும்
அந்த பட்டியலில் பொய்நாவு
என்றும் பொய்சாட்சி என்றும் இரண்டு முறை பொய் வருவதை கவனிக்கவும்.
பொய்யை
ஏன் தேவன் வெறுக்கிறார்?
அவர்
சத்தியத்தின் தேவன். அவர் கன்மலை;
அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம்
நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்;
அவர் நீதியும் செம்மையுமானவர் - உபாகமம் 32: 4.
தேவன்
பொய் சொல்லாதவர் - தீத்து 1: 3.
பொய் பேசுகிறவர்களை அழிக்கிறார்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர்
அருவருக்கிறார்.
(சங்கீதம் 5: 6).
கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள்
இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன்
நிலைப்பதில்லை என்றார் சங்கீதக்காரர் 101: 7
எனவே,
கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாகக் இருக்க விரும்பினால்,
அவர்கள் பொய்யில் ஈடுபட முடியாது.
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,- கொலோசெயர் 3: 9.
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால்,
பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப்
பேசக்கடவன்.- எபேசியர் 4:25
ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச்
சுமத்தும்படி,
ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால், வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும்
நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணை செய்யக்கடவர்கள்;
சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல்
அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், அவன் தன் சகோதரனுக்குச்
செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த்
தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. - உபாகமம்
19: 16-19
ஒரு நபர் கொலை செய்யப்பட்டதாக பொய்யாக இன்னொருவர் மீது குற்றம்
சாட்டுவது பொய்
சொன்னவர் தலையில் மரண தண்டனையை கொண்டு வரக்கூடும்.
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத்
தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. – நீதி 19: 5
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்
– நீதி
19: 9
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும்,
கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும்,
*பொய்யர்* அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற
கடலிலே பங்கடைவார்கள் என்றார். – வெளி 21: 8.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக