#506 - *இஸ்ரவேலின் முதல் இராஜா சவுல். இவர் செய்த தவறுகள் (அல்லது
பாவங்கள்) எத்தனை?*
*பதில்*
மனுஷன்
செய்த பாவங்கள் எத்தனை என்று தேவனை தவிர யாரும் எண்ண முடியாது. அவரே அதை தன்
முதுகுக்கு பின்னால் எறிந்து போட விரும்புகிறவர் (ஏசா. 38:17)
*குறிப்பான சிலவற்றை கீழே பட்டியலிடுகிறேன்*:
1)ஆசாரியனாகிய
சாமுவேல் செய்ய வேண்டிய வேலையை சவுல் செய்தது.
1சாமு. 13:8-13 அவன் தனக்குச்
சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; … அப்பொழுது சவுல்: ... சர்வாங்க தகனபலியைச்
செலுத்தினான். ... சாமுவேல் வந்தார்;
… நீர் செய்தது என்ன என்று சாமுவேல்
கேட்டதற்கு, சவுல்:
ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும்,
குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், … கண்டபடியினாலே, .... துணிந்து, சர்வாங்க
தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.
சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய
தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி
கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
2)எல்லாவற்றையும்
அழிக்க சொன்ன வார்த்தையை மீறியது
1சாமு.
15:22-23
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க
தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும்
கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின்
நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல்
பில்லிசூனிய பாவத்திற்கும்,
முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர்
கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார்
என்றான்.
3)
கிபியோனியரை கொன்ற கணக்கு 2 சாமுவேல் 21-1
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக