புதன், 31 ஜூலை, 2019

#301 - ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனின் காரியங்கள் என்ன என்ன ... அவன் எப்படி இருக்க வேண்டும்?


#301 - *ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனின் காரியங்கள் என்ன என்ன ... அவன் எப்படி இருக்க வேண்டும்?*

*பதில்* :
இரட்சிப்பு என்ற வார்த்தையை - கிறிஸ்துவின் பெயரை சொல்லி பைசா சம்பாதிக்கும் கும்பல்களால் அர்த்தமற்றதாக்கி பலரை நரகத்திற்கு வழி நடத்தி வரும் இந்த காலத்தில் இந்த கேள்வியை கேட்டமைக்கு நன்றி.

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தவர்கள் இந்த காலங்களில் ஏராளமானவர்கள் – இது வேதாகம போதனை அல்ல !!

ஞானஸ்நானம் எடுத்தபின் இரட்சிப்பு என்று தான் வேதாகமம் சொல்கிறது (மாற்கு 16:16, மத். 1:21, 2தெச. 2:13, அப். 22:16)

முக்கியமாக – ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும் போது – தான் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுக்கிறேன் என்பதை உணர்ந்திருக்கவேண்டும். இல்லாவிடில் வேதத்தின் படி அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்த்தருடைய வசனத்தில் – பரலோக பாதையின் முடிவு வரை நிலைத்து இருக்கும் போது தான் பெற்று கொண்ட இரட்சிப்பை நிறைவேற்றி இளைபாறுதலில் இடம் பெறுகிறார்கள் (மாற்கு 13:13)

*இரட்சிப்பின் பாதையில் நியமிக்கப்பட்டவர் எப்படி இருக்கவேண்டும்*? /  *ஞானஸ்நானம் எடுத்தபின் ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும்*?

1. *வேதத்தை தவறாமல் படியுங்கள்*
தேவனுடைய சித்தத்தைக் கற்றுக்கொள்வதற்கும் பிழையைத் தவிர்ப்பதற்கும் நம்முடைய ஒரே வழி விடாமுயற்சியுள்ள பைபிள் படிப்பு. அப். 17:11; சங். 1: 2; 2தீமோ. 2:15; 3: 16,17.

2. *அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்*
தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், அவரைப் புகழ்வதற்கும், நம்முடைய தேவைகளை தொிவிப்பதற்கும் ஜெபமே நமது வழிமுறையாகும். பிலி. 4: 6; 1 பேதுரு 5: 7; மத். 6: 9-13; 1 தெச. 5:17

3. *உள்ளூர் சபையில் உங்களை ஈடுபடுத்துங்கள்*
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் எப்போதும் உள்ளூர் சபை ஐக்கியத்தில் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டனர். அந்த சபையின் ஊழியத்தில்  ஈடுபடவும் தீவிரமாக பங்கேற்கவும் அவர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர். அப்9: 26-28; 11:26; எபி. 13:17; 1 கொ. 1: 2; எபே. 4:16


4. *மற்றவர்களுடன் சரியான உறவைப் பயிற்சி செய்யுங்கள்*
சொந்த குடும்பத்தில் பே. 5: 22-6: 4; கொலோ. 3: 18-21; தீத்து. 2: 4,5.

தேவைப்படுபவர்களுக்கு - லூக்கா 10: 25-37; அப். 20:35; யாக். 1:27; மத். 25: 34-40.

அரசாங்கத்திற்கு - ரோ. 13: 1-5; 1பேதுரு 2: 13,14; மத். 22: 17-21.

தொழிலில் பே. 6: 5-9; தீத்து 2: 9,10; கொலோ. 3: 22-4: 1; சங். 37:21.

5. *மற்றவர்கள் நற்செய்தியைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்*
இயேசுவிடம் மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை அறிய அனைத்து கிறிஸ்தவர்களும் பணியாற்ற வேண்டும் - அப். 8: 4
; நீதி. 11:30; 2 தீமோ. 2: 2,24-26; யோ. 4: 28-30,39; 1: 40-46; எபி. 5:12.

6. *நேர்மையான ஒழுக்க வாழ்க்கை வாழ்க*
மாற்கு 7: 20-23; ரோ. 1: 26-32; 1 கொ. 6: 9-11; கலா. 5: 19-21;

7. * தேவனுடைய சித்தத்தை செய்யுங்கள்*
லூக்கா 14: 26-33
; மத். 28: 18-20; 16: 24-27; 6: 19-33; ரோ. 12: 1,2; 6: 1-18.

*ஞானஸ்நானத்திற்குப் பிறகு ஒருவர் பாவம் செய்தால் என்ன செய்ய வேண்டும்*?
அப்போஸ்தலர் 8:22; 1 யோவான் 1: 9

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக