வெள்ளி, 5 நவம்பர், 2021

விலை நிர்ணயம் செய்ய முடியாது !

*விலை நிர்ணயம் செய்ய முடியாது !*

By : Eddy Joel Silsbee

 

நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து தாமே நம்மை நினைத்தருள்வாராக.

 

பாவம் நிறைந்த பூமி

சூழ்ச்சி நிறைந்த ஜனம்

கபடு நிறைந்த சூழ்நிலை

வஞ்சகம் நிறைந்த சமுதாயம்

சிருஷ்டிகரையே சொந்த கற்பனைக்கேற்ப நாளொன்றுக்கு உருவாக்குகிற உலகத்தார்,

மேட்டிமை நிறைந்த உலகம் என்று எப்பக்கத்திலும் இப்படிப்பட்ட மனப்பாண்மை இருக்கும் போது;

பரிசுத்தமும் பாவ நிவாரணமும் உலகத்திலே தேடி கிடைத்துவிட முடியுமா?

 

இரத்தம், இருதயம், லிவர், கிட்னி, கண் போன்ற எந்த உடல் உறுப்புகளையும் உலகத்தில் யாராலும் உற்பத்தி செய்ய இயலாதென்பதால் இந்த உலகத்தில் எவருமே அவைகளை இன்னொருவரிடமிருந்து பெற *குறிப்பிட்ட விலையை* நிர்ணயம் செய்ய முடியாது. அவைகளை தானமாக இலவசமாகத்தான் கொடுக்கமுடியும்.

 

வ்வுகில் வாழும் ஆயுட்காலத்திற்குப் பின், பரலோகத்தில் நித்தியக் காலமாய் வாழும்படிக்கான ஓர் இடத்தை கிரயம் கொள்ள போதுமான பணம் எவரிடம் இருக்கும்?

 

பரலோகத்திலிருந்து இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, உலக மக்களுக்கு மீட்பையும் மீட்பின் பாதையையும் அளித்துப்போனார். 1யோ. 4:2, 1பேதுரு 3:21, யாக். 4:12, எபி. 7:24

 

அவர் பிறந்ததையும், வளர்ந்ததையும், பிரசங்கித்ததையும், தன் வல்லமையையும், இயற்கைக்கு மேலே தனக்கு அதிகாரம் உண்டு என்று நிரூபித்ததையும், மரித்ததையும், மரணத்தையே ஜெயித்து அதே சரீரத்தில் உயிர்த்தெழுந்ததையும், அநேகருடைய கண்கள் காணும்படியாக பரலோகத்திற்கு ஏறிப்போனதும் *கதையல்ல, சரித்திர நிகழ்வு* !!

 

மரணத்தை ஜெயித்து அநேகரது கண்கள் காணும்படியாக பரலோகம் சென்றது இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எவருமே இல்லை.

 

அப்பேற்பட்ட இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்,

நாம் பரலோக வாழ்வை சுதந்தரிக்கும்படி,

எவருமே பூமியிலிருந்து விலை செலுத்த முடியாதாகையால், தம்முடைய மகா பெரிதான கிருபையினாலும் இரக்கத்தினாலும்  பிதாவாகிய கடவுள் நம்மனைவருக்கும் அந்த இரட்சிப்பை *இலவசமாய் அருளினார்*. தீத்து 3:5, எபே. 5:26, அப். 22:16

 

ஆகவே இவ்வளவு பெரிதான விலைமதிப்பற்ற அந்த இரட்சிப்பை எந்த விலையைக் கொடுத்தும் அல்ல .... கடவுளுக்கு எதிரான தவறுகளை உணர்ந்து, கடவுளின் *வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே* அதை பெற்றுக்கொள்ளமுடியும். 1பேதுரு 1:2, 2தீமோ. 1:9, ரோ. 11:6

 

உங்களின் இன்றைய உத்திரவாதம் என்ன?

இன்றும் நேரம் இருக்கிறது !!

பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/EZRcxtQKUhQ

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக