திங்கள், 15 நவம்பர், 2021

அறியாதக் காலத்தை வீணாக்கவேண்டாம்

*அறியாதக் காலத்தை வீணாக்கவேண்டாம்*

By : Eddy Joel Silsbee

 

தேவனுடைய நாமத்திற்கே சகல மகிமையும் கனமும் உண்டாவதாக.

 

எவ்வளவு வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்தாலும் நம்முடைய ஆவியை நம் விருப்ப காலத்திற்கு பிடித்துத் தக்க வைத்துக்கொள்ள முடியாது.

 

எத்தனை மருத்துவர்களும், உபவாசங்களும், ஜெபங்களும், முயற்சிகளும் ஏறெடுத்து தடைசெய்தாலும்;

தனக்குக் குறிக்கப்பட்ட நேரத்தில் தேவன் சொல்லும் இடத்திற்கு கிளம்பிவிடும். பிர. 12:7; 3:21, யோபு 34:14-15, சங். 90:3, தானி. 12:2

 

இன்னும் எவ்வளவு நாள் நமக்கு இவ்வுலகில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்று எவராலும் கணிக்க முடியாது... யோபு 7:21

 

ஆகவே கலகங்களை களைந்து,

வார்த்தையானவரின் வார்த்தைக்குக் கீழ்படிந்து,

சொந்த கொள்கையை தூர எறிந்து,

பகைமையை உதறிப்போட்டு,

வரட்டு கவுரவத்தையும், வீண் வைராக்கியத்தையும் நிராகரித்து, முழுவதுமாய் ஒப்புக்கொடுப்போம்.

 

எவ்வளவு கூப்பாடு போட்டாலும்,

அர்த்தமே தெரியாத பாஷைகளில் நீங்கள் கதறினாலும்,

தூதர் பாஷையை பேசுவதாக அதீத நம்பிக்கொண்டாலும்,

இவைகள் எல்லாம் தேவனுக்கு முன்பாக நாமே போட்டுக்கொள்ளும் தடைமேகங்கள் !!  ... வாசித்துப்பாருங்கள். புலம்பல் 3:42-44, 8; எரே. 15:1, சகரி. 7:13

 

இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவனுக்கு உகந்தவர்களாகவும் எல்லோரிடமும் அன்பு பாராட்டியும், பகைவர்களை உள்ளார்ந்த இருதயத்தில் மன்னித்து, பகையை மறந்து, மனித கோட்பாடுகளை துறந்து, கர்த்தரின் வாக்குக்கு மாத்திரமே செவிசாய்த்து, செம்மையாய் வாழ எப்போதும் நாம் முற்படுவோம்.

 

நாம் அல்ல அன்பே நம்மை ஆளட்டும். (கொலோ. 3:15)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/aZo5Lb7LDrI

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக