சனி, 13 நவம்பர், 2021

அகத்திலும் வெள்ளை அவசியம்

*அகத்திலும் வெள்ளை அவசியம்*

By : Eddy Joel Silsbee

 

பரலோகத்தில் வாசம் செய்யும் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, வெள்ளை pant, வெள்ளை நிற புடவை என்று எல்லாம் வெள்ளை நிறத்தில் துணி உடுத்திக்கொள்வதை “பரிசுத்தம்” என்று ஊர் மக்களை நம்ப வைக்கலாம்.

 

ஆனால் உள்ளார்ந்த பரிசுத்தம் இல்லாதவர்களை,

இயேசு கிறிஸ்து, *வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை* என்கிறார் !! மத். 23:27

 

சினிமாவில் பேய்கள் என்று வெள்ளைத் துணியுடன் தான் அலைய விடுகிறார்கள் !

 

தலையிலிருந்து கால் வரை வெள்ளையை உடுத்திக்கொண்டாலும், தேவன் சரீரத்தைக் கவனிப்பதில்லை. 1சாமு. 16:7

 

தேவன் *காரிருளிலும் இருப்பவர் என்பதை மறக்க வேண்டாம்* !!

 

ஆதார வசனங்கள் இதோ :

2நாளா. 6:1 ... சாலோமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

 

யாத். 20:21  ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

 

உபா. 4:11  நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

 

சங். 18:18-19  அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.  வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

 

சங். 18:10-11  கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.

 

சங். 97:2  மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

 

எபி. 12:18-19  அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,

எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.

 

ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் எந்த விளக்குமே கிடையாது என்பதை யோசித்துப் பார்த்ததுண்டா?

இருதயத்திலும் வெள்ளையை உடுத்தி,

சபை கூடுதலில் கூச்சலும் ஆட்டமும் இல்லாமல்,

தேவனுக்கு முன்பாக பயத்தோடும் நடுக்கத்தோடும் தொழுது கொள்ளவேண்டும்.

 

தேவ வசனத்திற்கு உண்மையான கீழ்படிதலே அவசியம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/BstiC1wvXdA

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக