வியாழன், 11 நவம்பர், 2021

தேவனோடிருந்தால் வெற்றி தேடிவரும்

*தேவனோடிருந்தால் வெற்றி தேடிவரும்*

By : Eddy Joel Silsbee

 

நம்மீது இரக்கமும் கிருபையும் உள்ள தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக.

 

பணக்காரனோ, ஏழையோ, உழைப்பாளனோ, சோம்பேறியோ, பெரியவனோ, சிரியவனோ எல்லோருக்கும் கஷ்டமும், துன்பமும், மகிழ்ச்சியும், வியாதியும், வேதனையும், சுகமும், துக்கமும், நிச்சயம் உண்டு. பிர. 2:14, 9:1-2, சங். 49:10

 

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எல்லாவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும். பிர. 2:15-16,

 

எப்படி அல்லது எப்போது மீண்டு வருவது என்பது அவரவர் பெற்றுக்கொள்ளும் கிருபையை பொருத்தது. சங். 119:153, புல. 5:1, யாத். 3:7-8, சங். 9:13-14

 

உலகத்தின் அனைத்து நதிகளும் கடலில் போய் ஒன்று சேர்ந்தாலும் ஒரு நாளும் கடல் தன்னிறைவு அடையாதது போல (பிர. 1:7) மனிதன் நிச்சயம் தன் வாழ்நாளை கடந்து செல்லவேண்டும். கண்ணாடி குப்பியில் தன்னை அடைத்து வைத்துக்கொண்டாலும் காலத்தை பிடித்துக்கொள்ள அவனால் இயலாது !

 

கவலைகளும் நெருக்கங்களும் நம்மை எவ்வளவு சூழ்ந்தாலும், அவைகள் நம்மை மேற்கொள்ளாதவாறு நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்து நிற்போம். சங். 25:2, எரே. 1:19, 1:8

 

“உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.” எரே. 15:20-21

 

தேவனுடன் ஒன்றியிருந்தால், விடுதலையும், வெற்றியும் நிச்சயம் நம்மை தேடி வரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/QD_d0NB8tx8

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக