வியாழன், 7 அக்டோபர், 2021

மாய்மாலம்

*மாய்மாலம்*

By : Eddy Joel Silsbee

 

பரலோகத்தில் வாசம் செய்யும் தேவனின் கிருபை நம்மை இன்னும் அரவணைப்பதாக.

 

தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (லூக்கா 18:14) என்கிற வசனத்தை படித்துவிட்டு;

தான் உயர்த்தபடவேண்டும் என்பதற்காக

மழுங்கி மழுங்கி பேசுவதும்,

கூழைக் கும்பிடு போடுவதும்,

ஆதாய அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்கு *கிறிஸ்தவர்கள் வேஷம் போடுவது அதிகமாகிவிட்டது*.

 

மனுஷனை ஏமாற்ற முயற்சிக்கலாம்.

இருதயத்தையே ஆராய்கிற தேவனுக்கு உண்மை நோக்கம் தெரியாதா என்ன? (தானி. 5:22, 2நாளா. 6:31)

 

கை குலுக்க கையை நீட்டுபவருக்கு,

தன் சரீரத்தில் எந்த அசைவையும் காட்டாமல் கடமைக்கென்று தங்கள் கையை நீட்டுபவர்கள் பெருகிவிட்ட இந்த மாய்மால காலத்தில்;

உத்தமமாய் தன்னை தானே தாழ்த்தி மற்றவர்களை கனம் பண்ணும் உண்மையான தாழ்மையை ஒருவருக்கொருவர் செலுத்துவதில் முந்திக்கொள்வோம். (யாக். 4:10)

 

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்;

துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்;

பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. 1சாமு. 2:9

 

ஊழியக்காரன் என்றால் எஜமானன் அல்ல !!

தாழ்மைபடுவோம்.

நம்மை நாமே அல்ல… தேவனே உயர்த்துவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்: https://youtu.be/Knp3x2m8pLw

 

*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக