சனி, 25 செப்டம்பர், 2021

ஜெபத்தில் தாங்குவோம்

*ஜெபத்தில் தாங்குவோம்*

By : Eddy Joel Silsbee

 

அன்பின் தேவன் தாமே நம் அனைவரையும் சீர்ப்படுத்துவராக.

 

சில கலிலேயர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று சொல்லப்பட்ட போது "நீங்கள் நல்லவராயிருப்பதனால் மோசமானவர்கள் தான் கொலை செய்யப்படுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம் என்றார் இயேசு கிறிஸ்து (லூக். 13:1-5)

 

பல நேரங்களில் நமக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது.

 

யாராவது பிரச்சனையில் இருந்தால், “என்னமா ஆட்டம் போட்டான், அதான் ஆண்டவரா பாத்து அவனுக்கு தண்டன கொடுத்துட்டாருன்னு” சொல்லி விடுவோம்.

 

மற்றவர்கள் துன்பம் அனுபவிக்கும் போது, நாம் ஒரு போதும் சந்தோஷப்படக்கூடாது.

 

மாறாக, நமக்கும் அப்படி ஒரு சூழ்நிலையோ அல்லது இன்னும் அதிகமாகவோ எந்த நேரத்திலும் வரலாம் என்று தேவபயத்தோடு இருப்போம்.

 

கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

 

அவர்கள் நம்மிடம் சொல்லாவிட்டாலும்,

உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் என்று தம்பட்டம் அடிக்காமலும், உத்தமமாய் ஜெபிக்கும் போது நிச்சயம் அதன் பலன் நம்மையும் வந்து சேரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

 

https://youtu.be/3jpOqjvSZc8

 

*Please Subscribe & Watch* our YouTube Videos
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக