*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 18 June
by : Eddy Joel Silsbee
நம்முடைய பிதாவாகிய தேவனுடைய நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
*பாஸ்டரும் இல்லை, தலைவனும் இல்லை, சொல்லிக்கொடுப்பவனும் இல்லை, விரிவுரையாளரும் இல்லை*..
ஆனாலும்,
எறும்புகள்;
தானாக ஒன்றன்பின் ஒன்று செல்லுகிறது,
தானாக வேலை செய்கிறது,
தங்களுக்குள் சண்டை போடுவதில்லை,
பொிய லாபமான ஆதாயம் கிடைத்தால் *அவரவர் தன் தன் பக்கத்துக்கு இழுக்காதபடி* ஒரே திசையில் தூக்கி செல்கிறது.
நீயா நானா என்று சண்டை போட்டுகொண்டு தனி தனி கூடுகளில் தனக்கு இஷ்டமான நண்பர்களை மாத்திரம் சேர்த்துக்கொண்டு வாழ்வது கிடையாது.
*ஒரே கூட்டில்*, எல்லாம் வாழ்கிறது,
*தன்னுடைய சேமிப்பு தனக்கு தான்* என்றில்லாதபடிக்கு பொதுவாய் சேர்க்கிறது நீதி. 6:6-8
மனிதர்களாகிய நமக்கோ;
அறிவு இருக்கிறது,
சபை இருக்கிறது,
ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள்,
மூப்பர்கள் இருக்கிறார்கள்,
வழிநடத்துபவர்கள் இருக்கிறார்கள்,
ஆலோசகர்கள் இருக்கிறார்கள்,
அநுதின வேலை இருக்கிறது,
சம்பாத்தியம் இருக்கிறது...
பிரச்சனை வந்தால் பிரத்யேகமாக ஆலோசனை சொல்லப்படுகிறது,
குறிப்பாக சுட்டிக்காட்டப்படுகிறது,
விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது...
எல்லாம் இருந்தும்;
*புத்தி வேலை செய்வது இல்லை*.
சொல்லப்படும் வார்த்தைக்கு கீழ்படிய மனம் மறுக்கிறது.
சுய மரியாதையும்,
சுய விளம்பரமும்,
சுய கவுரவத்தையும் தேடி தேடி
கிறிஸ்தவத்தையும் குடும்பத்தையும் அன்பையும் அரவணைப்பையும் தொலைப்பதை தினம் தினம் காணமுடிகிறது !! நீதி. 6:6
தாழ்மையும் விட்டுக்கொடுத்தலும் சகித்தலும் இல்லாத ஒருவன் தன்னை அன்புள்ளவன் என்று சொல்லிக்கொள்ள தகுதியில்லை என்கிறது வேதம் – 1கொரி. 13:4-8
சிந்திப்போம்… வீண் பெருமைகளையும், வரட்டு கவுரவத்தையும் களைந்து ஒருவருக்கொருவர் தாழ்த்தி தேவனை மகிமைப்படுத்துவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக